எரிசாராய கழிவுநீரால் பாதிப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்!

எரிசாராய தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் ஏற்படும் பாதிப்பை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்தபோது அவர்களை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள சின்னபுலியூரில் தனியார் எரிசாராய தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீரால் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், ஆலையில் இருந்து வெளியேறும் புகை மற்றும் சாம்பலால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் ஈரோடு மாவட்ட அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்திருந்தார்கள். […]

தொடர்ந்து படியுங்கள்