Decaying Indian democratic values
|

அமலாக்கத்துறையும், அடக்குமுறையும்! சீரழியும் மக்களாட்சி விழுமியங்கள்!

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் அதனை நடைமுறைப்படுத்துவதில்தான் அதன் உயிர் இருக்கிறது என்று கூறினார். எந்த சட்டமுமே அதை தவறாகப் பயன்படுத்துபவர்களால் ஒரு மோசமான ஆயுதமாக மாற்றப்பட முடியும். அதிலும் கடுமையான குற்றங்களைத் தடுப்பதற்காக உருவாக்கப்படும் கடுமையான சட்டங்கள் ஒரு எதேச்சதிகார ஆட்சியின் கையில் மோசமான ஆயுதமாக மாறிவிடும்!