கோயிலைச் சுற்றி தீண்டாமை வேலி: பிடுங்கியெறிந்ததால் பரபரப்பு!
பட்டியல் சமூகத்தினர் உள்ளே வரக் கூடாது என்பதற்காக கோயிலைச் சுற்றி அமைத்த தீண்டாமை வேலியைப் பிடுங்கியெறிந்த அதிகாரிகளின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த கெம்மங்குப்பம் கிராமத்திலுள்ள மூன்றரை ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் முருகன், முனீஸ்வரர், ஆஞ்சநேயர், கெங்கையம்மன் சந்நிதிகள் அடங்கிய கிராமக் கோயில் அமைந்திருக்கிறது. அதனருகில், சிறிய விளையாட்டு மைதானம், நெல் களம், காரிய மேடை, குளம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி போன்றவையும் இருக்கின்றன. அனைத்துச் சமூக மக்களும், இந்தக் கோயில்களில் […]
தொடர்ந்து படியுங்கள்