ஆளுநர் தேநீர் விருந்து: திமுக புறக்கணிப்பு!
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நாளை(ஆகஸ்ட் 15) நடக்கவிருக்கும் தேநீர் விருந்தை திமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. பொதுவாகச் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் அன்று அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி, சுதந்திரதினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் ஆளுநர் அர்.என்.ரவி தமிழ்நாடு அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாகக் கூறி, திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் விசிக, சிபிஐ(எம்), காங்கிரஸ், மனிதநேய மக்கள்…