டாப் 10 நியூஸ்: சென்னை பீச் டூ தாம்பரம் ரயில் ரத்து முதல் ‘புஷ்பா 2’ டிரெய்லர் வரை!
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தாம்பரம் – சென்னை கடற்கரை இடையேயான மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தாம்பரம் – சென்னை கடற்கரை இடையேயான மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி மீது நான்கு பிரிவுகளின் கீழ் எழும்பூர் காவல் நிலையத்தில் இன்று (நவம்பர் 5) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கு மக்கள் குறித்து நான் இழிவாக பேசியதாக திமுகவைச் சேர்ந்தவர்கள் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று நடிகை கஸ்தூரி இன்று (நவம்பர் 4) தெரிவித்துள்ளார்.
தெலுங்கு மொழி பேசும் மக்களை இழிவுபடுத்தி தான் பேசிய கருத்துகளை நடிகை கஸ்தூரி திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக டெல்லி மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி இன்று (நவம்பர் 4) வலியுறுத்தி உள்ளார்.
நடிகை கஸ்தூரி தொலைக்காட்சி விவாதங்களிலும் நேர்காணல்களிலும் தொடர்ச்சியாக பங்கேற்று நான் நடுநிலையான ஆள் என்று சொல்லிக்கொண்டு திராவிடத்திற்கு எதிரான கருத்துகளை பேசிக்கொண்டிருந்தார்.
இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரஹ்மான் மனைவி சாயிராவுக்கு தமிழ் தெரியாதா அவரது தாய் மொழி என்ன? எனக் கேள்வி எழுப்பியிருந்தார் நடிகை கஸ்தூரி. அதற்கு தனக்கே உரிய பாணியில் ரத்தின சுருக்கமாக நகைச்சுவையுடன் ‘காதலுக்கு மரியாதை’ எனக் கூறி சமூக வலைத்தளத்தில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார்.