Tகுறை கேட்காமல் சென்ற கிரண்பேடி

Published On:

| By Balaji

தீ அணைப்புத் துறை ஆய்வுக்கு சென்ற துணை நிலை ஆளுநர் புதுச்சேரியில் இரண்டு நாளுக்கு முன்பு குப்பை கிடங்குகளை எரிக்க உத்தரவுபோட்டார்.குப்பைகளை எரிப்பதை பார்வையிட சென்ற கிரண்பேடியிடம், தீ அணைப்பு வீரர்கள் குறைகளை சொன்னார்கள், கை உரை இல்லை, மாஸ்க் இல்லை, தங்கும் வசதியில்லை, பதவி உயர்வு இல்லை, 19 மணி நேரம் வேலை செய்கிறோம்,ஏன்? அடிப்படை வசதியே இல்லை என்று, தீ அணைப்பு வீரர்களின் குறைகளை ஆய்வு செய்ய, ஜனவரி 13 ம் தேதி காலை பீச் ரோட்டில் உள்ள தீ அணைப்பு தலைமை அலுவலகத்துக்கு சென்ற கிரண்பேடி அங்கு குழுமியிருந்த பத்திரிகையாளர்களைக் கண்டதும் சூடானார். “ பத்திரிக்கையாளர்களுக்கு யார் தகவல் சொன்னது?” என்று கேட்டபடி, அதிகாரி அறைக்கு சென்று தீ அணைப்பு அதிகாரி, மற்றும் தலைமை செயலாளரிடம் மட்டும் பேசிவிட்டு புறப்பட்டார், தீ அணைப்பு வீரர்களோ குறை கேட்க வந்த துணை நிலை ஆளுநர், குறைகேட்காமல் போய்விட்டார் என்று வேதனையடைந்தார்கள்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share