மூணெழுத்து மந்திரம்… ஆளப்போற தமிழன் : தவெக கொடிப்பாடலில் கொட்டிக்கிடக்கும் குறியீடுகள்!

Published On:

| By christopher

Symbolic references in the tvk party flag anthem song

சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் அடர் சிவப்பு, மஞ்சள் நிறம் கொண்ட இருவண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் தலைவர் விஜய் முதன்முதலாக இன்று (ஆகஸ்ட் 22) அறிமுகம் செய்து கொடியேற்றினார்.

அதன்பின்னர் விஜய் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் கொடிப் பாடல் வெளியிடப்பட்டது. சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கலங்கிய கண்களுடன் விஜய் மற்றும் அவரது அருகில் அமர்ந்த புஸ்ஸி ஆனந்த் அதனை கண்டனர். தற்போது இந்த பாடல் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

bussy anand

இந்த பாடலை விஜய்க்கு திரையுலகில் ’ஆளப்போறான் தமிழன்’, ’மெர்சல் அரசன்’, ’ஒருவிரல் புரட்சி’, ’சிங்கப்பெண்ணே’ உள்ளிட்ட பல வெற்றிப்பாடல்களை தந்த பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். விஜய்யின் தீவிர ரசிகரான இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். பின்னணி பாடகர் தீபக் பாடியுள்ளார்.

போர்களத்தில் யானையில் இருப்பவர்கள் (ஆட்சியாளர்கள்) வீரர்களை (மக்களை) அடித்து விரட்டும் காட்சிக்கிடையே, குதிரையில் ஒரு வீரர் (விஜய்) கொடியுடன் வர, “வரமே வரமே வா வா நிஜமே… தலைவா தலைவா காவல் தர வா’ என பாடல் தொடங்குகிறது.

அப்போது வீரனுக்கு பின்னால் வரும் இரண்டு சாம்பல் நிற யானைகள், மக்களை அடித்து விரட்டும் யானைகளை முட்டி தள்ளி மண்ணில் வீழ்த்துகின்றன.

தொடர்ந்து ’வெற்றிக்கழக கொடியேறுது… மக்கள் ஆச நெஜமாகுது’ என குரல் ஒலிக்க, தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி கம்பத்தில் ஏற்றப்படும் காட்சி விரிகிறது.

இவ்வாறு பாடலின் தொடக்கத்தில் விஜயின் அரசியல் பிரவேசம் உருவகமாக காட்டப்படுகிறது.

தொடர்ந்து, ’தமிழன் கொடி பறக்குது… தலைவன் யுகம் பொறக்குது… மூணெழுத்து மந்திரத்த மீண்டும் காலம் ஒலிக்குது” என பாடல் வரிகள் இடம்பெறுகின்றன.

அப்போது முன்னாள் தமிழக முதல்வர்களான எம்ஜிஆர், அண்ணா ஆகியோருடன் விஜய் புகைப்படம் இருக்கும் காட்சி வருகிறது.

Image

அதன்பின்னர் வரும் முதல் சரணத்தில், ’சினிமாவில் உச்சத்தில் இருக்கும் விஜய் ஏன் அரசியலுக்கு வருகிறார்?’ என்பதை வர்ணிப்பது போன்று பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன.

”சிறுசும், பெருசும் ரசிக்குது,

சிங்க பெண்கள் சிரிக்குது

மக்களோட தொப்புள் கொடியில்

மொளச்ச கொடியும் பறக்குது

மனசில் மக்கள வைக்கும்

தலைவன் வரும் நேரமிது

மக்களும் அவன மனசில் வச்சி

ஆடிப்பாடி கூப்புடுது

சிகரம் கெடச்ச பின்னும் எறங்கி வந்து சேவ செஞ்சு

நீங்க குடுத்த எல்லாத்துக்கும் நன்றி காட்டும் காலமிது

தமிழா தமிழா நாம வாழப்போறோமா

ஒரு கறையில்லாத கையபுடிச்சி போகப்போறோமே”

தொடர்ந்து கொடியின் நிறம், அதில் உள்ள ஒவ்வொன்றுக்குமான விளக்கத்தையும் அளிக்கும் விதமாக இரண்டாம் சரணத்தை அமைத்துள்ளார் விவேக்.

”ரத்த செவப்பில் நெறமெடுத்தோம்

ரெட்ட யானை பலம் குடுத்தோம்

நரம்பில் ஓடும் தமிழுணர்வ

உருவிக் கொடியில் உருக் கொடுத்தோம்.

மஞ்சள் எடுத்து அலங்கரிச்சோம்

பச்ச நீலம் திலகம் வச்சோம்

பரிதவிக்கும் மக்கள் பக்கம்

சிங்கம் வர்றத பறையடிச்சோம்.

தூரம் நின்னு பாக்கும் தலைவன் காலமெல்லாம் மாறுது

தோளில் வந்து கையை போடும் தலைவன் கொடி ஏறுது

அரசர கேள்வி கேட்கும் தளபதியின் காலமடி”

அன்னைக்கே சொன்னோமே இது ஆளப்போற தமிழன் கொடி” என்று பாடல் வரிகள் நீள்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியான இந்த பாடல் வெளியான சில மணி நேரங்களில் அதிக பார்வைகளை பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது.

கொடிக்கான விளக்கமாக கொடிப்பாடல் வந்தாலும், கொடிக்கு பின்னால் சுவாரசியமான வரலாறு இருக்கிறது என விஜய் கூறியுள்ளதால் அப்போது மேலும் பல தகவல்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamilaga Vettri Kazhagam: Flag Anthem | தமிழக வெற்றிக் கழகம்: கொடிப் பாடல்

கிறிஸ்டோபர் ஜெமா

”இது நம் கட்சிக்கொடி மட்டுமல்ல…” : கொடி அறிமுக விழாவில் விஜய் பேச்சு!

அமைச்சரவை மாற்றமா? எனக்கு தகவல் வரலை – சிரித்த முதல்வர் ஸ்டாலின்

தவெக கட்சி கொடி அறிமுக விழாவில் கண்கலங்கிய புஸ்ஸி ஆனந்த்

 

 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share