சூரனை வதம் செய்த முருகப்பெருமான்: திருச்செந்தூரில் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்!

Published On:

| By Kavi

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று (நவம்பர் 18) திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கடந்த 13ஆம் தேதி கந்த சஷ்டி கவச விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் பக்தர்கள் விரதம் இருக்கத் தொடங்கினர்.

தினசரி காலை மாலை ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்குப் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு முக்கிய நிகழ்வான சிகர நிகழ்ச்சி எனப்படும் சூரசம்ஹாரம் இன்று மாலை தொடங்கியது.

இதனை முன்னிட்டு இன்று காலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தன.

தொடர்ந்து காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும், மதியம் 1 மணிக்குச் சாயரட்சை தீபாராதனையும் நடைபெற்றது.

சூரசம்ஹாரத்துக்காக மாலை 4 மணிக்கு ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளினார். அப்போது, கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என பக்தர்களின் கோஷம் விண்ணைப் பிளந்தன.

மக்கள் அலையில் வந்த ஜெயந்திநாதர் முதலில் யானை முகம் கொண்ட தாரகாசுரனை வதம் செய்தார். இரண்டாவதாகச் சிங்க முகம் கொண்ட சிங்கமுகாசுரனை வதம் செய்தார்.

Image

எனினும் தொடர்ந்து தலையை ஆட்டியபடி,தன்முகத்தோடு போரிட வந்த சூரபத்பனை  எழுந்தருளி வதம் செய்தார்.

பின்னர் மாமரமாக  மாறி வந்த சூரனை சம்ஹாரம் செய்தார்.
முருகனின் வேல் வீச்சில் சூரன் சேவலாகவும், மயிலாகவும் மாறினார். சேவலாகவும், மயிலாகவும் மாறிய சூரனை ஆட்கொண்டார் முருக பெருமான்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து ஜெயந்திநாதருக்கும் அம்பாளுக்கும் சந்தோஷ மண்டபத்தில் அலங்காரம், தீபாராதனை நடந்து கொண்டிருக்கிறது.

திருச்செந்தூரில் நடைபெறும் இந்த முக்கிய விழாவை முன்னிட்டு, லட்சக்கணக்கான முருக பக்தர்கள் கடற்கரையில் குவிந்து முருகனை வழிபட்டனர். திருச்செந்தூர் கடற்கரை மக்கள் அலையாக மாறியுள்ளது.

இதனால் 3000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

”அன்று ஆதரவு கூறியிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது”: எடப்பாடி

நொண்டி சாக்கு சொல்லி எடப்பாடி வெளிநடப்பு : தங்கம் தென்னரசு தாக்கு!

‘டைம் 100’ பட்டியலில் இடம்பிடித்த 8 இந்தியர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share