இயக்குனர் சிம்பு தேவன் இயக்கும் ‘போட்- நெய்தல் கதை’ எனும் படத்தில் யோகி பாபு நடிக்கிறார்.
மூன்று வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் தலைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. மாலி அண்ட் மாண்வி மூவி மேக்கர்ஸ் சார்பாக பிரபா பிரேம்குமார் இப்படத்தை தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க கடலிலேயே எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் நாயகி மற்றும் நாயகனை நோக்கி ஒரு கானா பாடல் பாடுவது போன்ற சூழல். அதற்கு ஜிப்ரான் டியூன் போட.. இப்பாடலை பத்மபூஷன் – சுதா ரகுநாதன் பாடினால் நன்றாக இருக்கும் என இசையமைப்பாளரும் இயக்குனரும் விரும்பியுள்ளனர்.

இதற்காக சுதா ரகுநாதனை அணுகியுள்ளனர். அவர் வியப்புடன் “எனக்காக ஒரு கானா பாடலை யோசித்தது ஆரோக்கியமான பரிசோதனை முயற்சி. இசை என்பது ஒலி வடிவமே. நிச்சயம் நான் பாடுகிறேன். ஆனால் நான் லண்டனிலிருந்து இந்தியா திரும்ப மூன்று மாதம் ஆகும்.”என்று கூறினாராம்.
பரவாயில்லை என பட குழுவினர் மூன்று மாதம் காத்திருந்து அவர் சென்னை திரும்பியதும் பாடல் பதிவை நடத்தியுள்ளனர்.
பாடலாசிரியர் வடசென்னையைச் சேர்ந்த கோல்ட் தேவராஜ். ரெக்கார்டிங் முடித்துவிட்டு தனக்கு பாடல் மிகவும் பிடித்துள்ளதாக ஜிப்ரானை பாராட்டினாராம் சுதா ரகுநாதன்.
இராமானுஜம்
’பிரதமரும் கொலை செய்ய அழைக்கிறாரா?’: சனாதன சர்ச்சைக்கு உதயநிதி பதிலடி!
உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை மையம்!
மத உணர்வுகளைத் தூண்டி குளிர் காய்கிறார்கள்: பாஜகவை சாடிய ஸ்டாலின்

Comments are closed.