சமையல் சிலிண்டர் உயர்வுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Stalin condemned for increase cooking cylinder prices
இன்று (ஏப்ரல் 7) பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை 2 ரூபாய் உயர்த்திய கையோடு சமையல் சிலிண்டர் விலையை 50 ரூபாய் உயர்த்தியது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு.
இதற்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
“நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா?
“உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்” என்பது, SadistBJP அரசுக்கு மிகவும் பொருந்தும்!
உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில், பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் எனக் கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களைத் தள்ளிவிட்டார்களே!?
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு அமைந்திருக்கிறது.
மக்களே… அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பா.ஜ.க.வின் வழக்கமாகிவிட்டது! இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது!
ஒன்றிய பாஜக அரசே…தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக” என்று வலியுறுத்தியுள்ளார். Stalin condemned for increase cooking cylinder prices
