தமிழகத்தின் ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை கடற்படையால் அண்மையில் காரைக்காலைச் சேர்ந்த 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து மேலும் 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 22 மீனவர்களை 4 விசைப்படகுகளுடன் கைது செய்துள்ளது இலங்கை கடற்படை. இலங்கை கடற்படையின் இந்த அட்டூழியத்துக்கு முடிவே இல்லாமல் இருப்பது தமிழக மீனவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
