உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் அணிக்கு தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் தலைமை தாங்குகிறார்.
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர், செப்டம்பர் 30ம் தேதி தொடங்கி அக்டோபர் 9 வரை சீனாவின் செங்டு நகரில் நடைபெற இருக்கிறது.
இந்தப் போட்டியில், காமன்வெல்த்தில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற தமிழக வீரரான சரத் கமல் தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஆடவர் டென்னிஸ் அணிக்கு மற்றொரு தமிழக வீரரான சத்யன் ஞானசேகரன் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்யன் தலைமையிலான இந்திய ஆடவா் அணியில் சனில் ஷெட்டி, ஹா்மீத் தேசாய், மனுஷ் ஷா, மானவ் தக்கா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
இந்திய மகளிா் டேபிள் டென்னிஸ் அணிக்கு மனிகா பத்ரா தலைமை தாங்குகிறார். இவருடைய தலைமையிலான மகளிர் அணியில் ஸ்ரீஜா அகுலா, ரீத் ரிஷியா, தியா சிதாலே, ஸ்வஸ்திகா கோஷ் ஆகியோா் இடம்பெற்றுள்ளனர்.
இந்த அணிக்கான பயிற்சியாளா்களாக எஸ்.ராமன், அனிந்திதா சக்கரவா்த்தி, மனிகாவின் தனிப்பட்ட பயிற்சியாளா் கிறிஸ் அட்ரியன் ஃபெய்ஃபா் சோ்க்கப்பட்டுள்ளனா்.
உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்காக இவ்விரு அணிகளும் செப்டம்பா் 25ம் தேதி சீனாவுக்குப் புறப்பட்டுச் செல்ல இருக்கிறது.
ஜெ.பிரகாஷ்
3 தங்கம் உட்பட 4 பதக்கங்கள்: காமன்வெல்த் தொடரில் சாதித்த தங்க தமிழன்!