அவர் விளையாடாதது மகிழ்ச்சியே: ஸ்ரீகாந்த் ஓபன் டாக்!

விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்திய அணி 3-வது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதனிடையே கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற முடியும்.

முன்னதாக கடந்த சில வருடங்களாகவே அதிரடியாக விளையாட வேண்டிய இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார். இந்நிலையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவரிடம் இருந்த துணைகேப்டன்ஷிப் பறிக்கப்பட்டது மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக மட்டும் விளையாடும் வாய்ப்பை கொடுத்துள்ளது பிசிசிஐ.

அதே போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இத்தொடரின் முதல் 2 போட்டிகளில் சொதப்பியதால் வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்ட நிறைய முன்னாள் வீரர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில், தற்போதுள்ள ஃபார்முக்கு கே.எல்.ராகுல் விளையாடி சுமாராக செயல்பட்டிருந்தால் அவருடைய மொத்த கேரியரும் முடிந்து போயிருக்கும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.எனவே 3வது போட்டியில் ராகுல் விளையாடாததால் அவருடைய கேரியர் தப்பித்ததை நினைத்து தான் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தன்னுடைய யூ டியூப் சேனலில் பேசிய அவர் “முதலில் நான் கே.எல் ராகுலுக்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நல்ல வேளையாக அவர் இந்த போட்டியில் விளையாடவில்லை. ஒருவேளை அவர் இந்த போட்டியில் விளையாடி சுமாராக செயல்பட்டு அடுத்த போட்டியில் விளையாடினால் அதோடு அவருடைய கேரியர் முடிந்திருக்கும். இதை நான் வெளிப்படையாக சொல்கிறேன். நன்றி கடவுளே நல்லவேளை அவர் விளையாடவில்லை” என்று கூறியுள்ளார்.

Thank God he didn play opener makes a big statement kl rahul

மேலும், “இது போன்ற பிட்ச்களில் யாராக இருந்தாலும் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாகும். குறிப்பாக விராட் கோலி உள்ளிட்ட யாராலும் இந்த பிட்ச்களில் ரன்களை அடிக்க முடியாது. ஏனெனில் முதல் இன்னிங்ஸில் குனேமானுக்கு எதிர்பாராத வகையில் சுழல் கிடைத்தது. இது போன்ற பிட்ச்களில் விக்கெட்டுகளை எடுப்பதும் அவ்வளவு கடினமானதல்ல. சொல்லப்போனால் நான் இங்கே பந்து வீசியிருந்தால் கூட சில விக்கெட்டுகளை எடுத்திருப்பேன். இது போன்ற கடினமான விமர்சனங்களை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்” என்றார்.

தொடந்து பேசிய அவர், “என்னை கேட்டால் இது போன்ற பிட்ச்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. அவர்கள் இதில் தவறு செய்கிறார்கள். 2008 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை நீங்கள் பார்க்கும் போது இப்போது போல பிட்ச் அதிகம் சுழலுக்கு சாதகமாக இல்லை. இருப்பினும் இந்தியா 2 – 0 என்ற கணக்கில் வென்றது ஆனால் இங்கே முதல் நாளிலிருந்தே தாறுமாறாக சுழல்கிறது. இது போன்ற பிட்ச்களில் பேட்டிங் செய்வதை பார்ப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. இது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு எந்த விளம்பரத்தையும் ஏற்படுத்தாது” என்று கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கர்நாடகா தேர்தல்: ஸ்கெட்ச் போட்ட அமித்ஷா…சொதப்பிய பாஜக

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்: வரலட்சுமி சரத்குமார்

லியோ பட ஒளிப்பதிவாளர் கொடுத்த ’ஷூட்டிங்’ அப்டேட்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *