அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வேறு நாட்டிற்கு மாற்றப்படும் என்று, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை ஆட்டத்தை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
ஜெய் ஷா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த அறிவிப்புகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல், ’ஜெய் ஷாவின் இந்த பேச்சை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
ஏனென்றால் அவர், இந்தியா பாகிஸ்தான் கடந்த முறை ஆசிய கோப்பையில் விளையாடிய போது அவர் மைதானத்தில் நேரில் வந்து பார்த்தார்.

ஜெய்ஷா அவருடைய அரசியலை எதிர்க்கட்சியினரிடையே மட்டும் தான் காட்ட வேண்டும். அது தவிர விளையாட்டில் அரசியலை கலக்கக்கூடாது என்று கம்ரான் அக்மல் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், ஆசிய கோப்பை திட்டமிட்டபடி பாகிஸ்தானில் தான் நடைபெற வேண்டும்.அப்படி இல்லை என்றால் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியா பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்ய வேண்டும்.
இதேபோன்று எவ்வித ஐசிசி போட்டியிலும் பாகிஸ்தான் இந்தியாவுடன் மோத கூடாது என்று கம்ரான் அக்மல் வலியுறுத்தியுள்ளார்.
வரும் ஞாயிறு அன்று நடைபெறும் இந்தியா- பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்.
ஆனால், பிசிசிஐ-யின் இந்த நடவடிக்கை, எதிர்வரும் ஐசிசி நிகழ்வுகளில் இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பரம எதிரிகள் மோதல் ! காத்திருக்கும் ’தி ராக்’
இலங்கை – நெதர்லாந்து: சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெறுமா இலங்கை?