உலக பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்!

விளையாட்டு

2022 ஆம் ஆண்டு உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இன்று விளையாடிய இந்திய பேட்மிண்டன் வீரர்கள் வெற்றி பெற்று காலிறுதிக்குள் முன்னேறினர்.

27 ஆவது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

இன்று (ஆகஸ்ட் 25) காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய பேட்மிண்டன் வீரர்கள் எச்.எஸ். பிரனாய் மற்றும் லக்‌ஷயா சென் இருவரும் போட்டியில் எதிர்கொண்டனர்.

Indian badminton players

இந்த போட்டியில் பிரனாய் 17-21, 21-16 மற்றும் 21-17 என்ற கணக்கில் லக்‌ஷயா சென் – ஐ வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

நாளை (ஆகஸ்ட் 26) நடக்கவுள்ள காலிறுதி போட்டியில் பிரனாய் சீன பேட்மிண்டன் வீரர் ஜாவோ ஜுன்பெங்கை எதிர்கொள்ளவுள்ளார்.

இதனை தொடர்ந்து, ஆடவர் இரட்டையர் பிரிவில் விளையாடிய இந்திய வீரர்கள் துருவ் கபிலா மற்றும் எம்.ஆர். அர்ஜுன் ஆகியோர் சிங்கப்பூர் பேட்மிண்டன் வீரர்கள் டெர்ரி ஹீ மற்றும் லோ கீன் ஹீன்-ஐ எதிர்கொண்டனர்.

Indian badminton players

இந்த போட்டியில் இந்திய வீரர்கள் 18-21, 21-15 மற்றும் 21-16 என்ற கணக்கில் சிங்கப்பூர் வீரர்களை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

நாளை நடைபெறவுள்ள காலிறுதி போட்டியில் இந்திய வீரர்கள் துருவ் மற்றும் அர்ஜுன் இருவரும் இந்தோனேஷியா பேட்மிண்டன் வீரர்கள் ஹெந்திரா செட்டியவான் மற்றும் முகமது அஹ்சன் ஆகியோருடன் விளையாட உள்ளனர்.

மோனிஷா

உலக பேட்மிண்டன்: இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய் வெற்றி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

1 thought on “உலக பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *