ரசிகர்களுடன் செல்பி எடுத்து கொண்டாடிய பி.வி.சிந்து

Published On:

| By Selvam

காமன்வெல்த் போட்டியில், பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற பி.வி.சிந்து, தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில், 72 நாடுகள் பங்கேற்ற காமன்வெல்த் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. ஆஸ்திரேலியா 178 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், இங்கிலாந்து 176 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், கனடா 92 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும், இந்தியா  22 தங்கம், 16 வெள்ளி , 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களுடன் நான்காம் இடத்திலும் உள்ளது.

நேற்று நடந்த மகளிருக்கான ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில்,  பி.வி சிந்து வெற்றி பெற்றார். கனடாவைச் சேர்ந்த் மிட்செல் லீ வீராங்கனையை 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை உறுதி செய்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உள்ளிட்டோர் பி.வி.சிந்துவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

பி.வி சிந்து வெற்றி பெற்றவுடன் இந்திய ரசிகர்கள் அரங்கத்தை ஆர்ப்பரிக்கச் செய்தனர். சிந்து ரசிகர்களை நோக்கி கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அப்போது அவரது ரசிகை ஒருவர், தனது செல்போனை சிந்துவிடம் கொடுத்து செல்பி எடுக்கச் சொன்னார். சிந்து அவருடைய செல்போனை வாங்கி ரசிகர்களுடன் செல்பி எடுத்தார். பி.வி.சிந்துவின் இந்த செயலால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

செல்வம்

காமன்வெல்த் ஹாக்கி: வெள்ளி வென்ற இந்தியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel