எஃப்டிஎக்ஸ் செஸ் போட்டி : முதல் சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி!

விளையாட்டு

அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்று வரும் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ போட்டியில் தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா விளையாடி வருகிறார்.

முதல் சுற்றில் உலகின் நம்பர் 1 ஜூனியர் வீரர் அலிரேஸா ஃபிரோஜாவை எதிர்கொண்டார் 17 வயது பிரக்ஞானந்தா. 4 ஆட்டங்களை கொண்ட முதல் சுற்றில் 2.5-1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 8 வீரர்கள் விளையாடும் இந்தப் போட்டியில் முதல் இடத்தில் உள்ளார் பிரக்ஞானந்தா.

இதற்கு முன்பு இவர் ஃபிரோஜாவுக்கு எதிராக விளையாடிய எந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்றது கிடையாது. இந்நிலையில் முதல்முறையாக ஃபிரோஜாவை தோற்கடித்துள்ளார்.

இரண்டாவது சுற்று இன்று (ஆகஸ்ட் 16 ) நடைபெற உள்ளது. இதில் பிரக்ஞானந்தா அனிஷ் கிரியை எதிர்கொள்கிறார். ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கிய எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ போட்டி ஆகஸ்ட் 21 ஆம் தேதி நிறைவுபெறுகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *