செஸ் ஒலிம்பியாட்: மூன்று இந்திய வீரர்கள் டிரா!

விளையாட்டு

சென்னை செஸ் ஒலிம்பியாட்டின் இன்றைய போட்டியில் 3 வீரர்கள் அடுத்தடுத்து டிரா செய்துள்ளனர்.

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து வீறுநடை போட்டு வருகின்றனர். ஓபன், மகளிர் என இரு பிரிவிலும் இந்திய அணியினர் இதுவரை விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளார்கள். குறிப்பாக தமிழக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் எதிரணி வீரர்களை சுலபமாக வீழ்த்தி அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேறி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 1) நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய ஏ அணி பிரான்ஸை எதிர்கொண்டது. இதில் கருப்பு நிற காய்களுடன் களம் கண்ட இந்திய வீரரும் கிராண்ட் மாஸ்டருமான அர்ஜுன் எரிகைசி, பிரான்ஸின் கார்னெட்டோவை 24வது நகர்த்தலுக்குப் பிறகு ஆட்டத்தை டிரா செய்தார். அடுத்து இந்தியா பி பிரிவில் களமிறங்கிய சாத்வனி ருனாக், பிரான்செஸ்கோவுடனான ஆட்டத்தை டிரா செய்தார். இந்தியா சி பிரிவில் களமிறங்கிய கங்குலி சூர்யா சேகர், ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில், அந்நாட்டு வீரர் ஷிரோவுடனான ஆட்டத்தை டிரா செய்தார்.
ஜெ.பிரகாஷ்

நிர்மலா பேச்சு: கிண்டலடிக்கும் சுவாமி… கேள்வி கேட்கும் திருமா

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *