மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது.
முதல் மூன்று நாள்களில் சிறப்பாக விளையாடி வந்த இந்தியாவின் ஆறு அணிகளும் நேற்று ( ஆகஸ்ட் 1) தடுமாற்றம் கண்டது. ஓபன் பிரிவில் இந்திய C அணி ஸ்பெயினிடம் 1.5-2.5 எனத் தோற்றது. இந்திய A அணி பிரான்ஸிடம் 2-2 என டிரா செய்தது. இந்திய B அணி மட்டும் இத்தாலியை 3-1 என வீழ்த்தியது.
மகளிர் பிரிவிலும் இந்திய அணிகள் தடுமாறின. ஜார்ஜியாவுக்கு எதிராக இந்திய C அணி, 1-3 எனத் தோற்றது. ஹங்கேரி, ஈஸ்டோனியா அணிகளை இந்திய A , இந்திய B அணிகள் தலா 2.5-1.5 என வீழ்த்தின.
ஓபன் பிரிவில் இந்தியா B அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தியா A அணி 7 ம் இடத்திலும் இந்தியா C அணி 20 ம் இடத்திலும் உள்ளன.
நான்கு சுற்றுகளுக்குப் பிறகு மகளிர் பிரிவில் இந்தியா A , இந்தியா B உள்பட எட்டு அணிகள் அனைத்து ஆட்டங்களையும் வென்றுள்ளன. புள்ளிகள் பட்டியலில் இந்தியா A அனி 4 ம் இடத்திலும் இந்தியா B அணி 6 ம் இடத்திலும் இந்தியா C அணி 28 ம் இடத்திலும் உள்ளன.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இரண்டாவது டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி!