ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி கோப்பை இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற்றுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கிய 7 வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதி போட்டி நாளை (ஆகஸ்ட் 13) நடைபெறுகிறது.
முன்னதாக நேற்று மாலை நடைபெற்ற முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் கொரியாவை மலேசியா வீழ்த்தியது.
இரவு 8.30 மணிக்கு நடந்த 2-வது அரையிறுதி போட்டியில் ஜப்பான் அணியை ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி வீழ்த்தியது.
அதன்படி, இடைவேளைக்கு முன் இந்தியாவின் ஆகாஷ்தீப் சிங் 19-வது நிமிடத்தில் ஒரு கோல், 23-வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் மற்றும் 30-வது நிமிடத்தில் மன்தீப் சிங் ஒரு கோல் என அடிக்க இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதேபோல் இடைவேளைக்கு பின் இந்தியாவின் சுமித் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த கார்த்தி தலா ஒரு கோல் அடிக்க ஆட்ட நேர முடிவில் இந்தியா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இச்சூழாலில் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் மலேசிய அணியை எதிர்கொள்கிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்