சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வரும் 21-ந் தேதி திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. Special Train from Chennai Egmore to Nellai on June 21
பயணிகளின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு சென்னை எழும்பூர்- திருநெல்வேலி இடையே ஜூன் 21-ந் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும்; மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜூன் 22-ந் தேதி இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து (வண்டி எண் 06089) ஜூன் 21 சனிக்கிழமை இரவு 9.55 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் திருச்சி- திண்டுக்கல் மார்க்கமாக மறுநாள் காலை 8.45 மணிக்கு நெல்லையை சென்றடையும்.
மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து (வண்டி எண் 06090) ஜூன் 22-ந் தேதி இரவு 9.40 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை இந்த சிறப்பு ரயில் வந்தடையும்.
இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை ஜூன் 18-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.