வார விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
வரும் 03.09.2023 (ஆவணி – 17) ஆம் தேதி முகூர்த்த நாள். அதோடு அன்றைய தினம் ஞாயிறு விடுமுறை நாள். இதனால் சென்னையிலிருந்து வழக்கமாகச் சனி ஞாயிறு சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களைக் காட்டிலும் வரும் செப்டம்பர் 2,3 ஆகிய வார இறுதி தேதிகளில் அதிக பேர் சொந்த ஊர்களுக்குச் செல்லவுள்ளனர்.
இந்நிலையில் தொலைதூரம் செல்லும் பயணிகளின் வசதிக்காக அரசு பேருந்து சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளது.
சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலத்திலிருந்து பிற இடங்களுக்கும், பெங்களூருவிலிருந்து பிற இடங்களுக்கும் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதன்மூலம் மொத்தம் 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இதுவரை வெளியூர் செல்ல 11,114 பயணிகள் முன் பதிவு செய்துள்ளனர்.
www.tnstc.in மற்றும் tnstc official செயலி மூலம் தொலை தூரம் செல்ல விரும்புவோர் பேருந்துகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
பிரியா
பிரசவத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையங்களை தவிர்க்கும் பெண்கள்: ஆய்வு சொல்வது என்ன?