சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் ஆறு பெட்டிகள் கொண்ட 28 ரயில்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மெட்ரோ ரயில் நிர்வாகம் 2028ஆம் ஆண்டின் உத்தேச பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் பணிகள் மேற்கொண்டுள்ளது. இவற்றில் ஆறு பெட்டிகள் கொண்ட 28 ரயில்களை அறிமுகப்படுத்தப்படும் திட்டம் முக்கியமானது.
கடந்த 2022ஆம் ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை 156 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த ரயில்கள் 19 மணி நேர செயல்பாட்டின்போது, ஒரு நாளைக்கு சுமார் 2.5 லட்சம் பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.
இரண்டாம்கட்டச் செயல்பாடுகள் தொடங்கும் நேரத்தில், தற்போதுள்ள அதிர்வெண்ணைக் கொண்டு நிர்வகிப்பது கடினமாக இருக்கும் என்றும், காலப்போக்கில், அது கூட்ட நெரிசலை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
இதன் விளைவாக, ஆறு பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்கள் ஆர்டர் செய்யப்பட்டால், அவை பீக் ஹவர்ஸில் பயன்படுத்தப்படலாம் மற்றும் நான்கு பெட்டிகள் கொண்ட ரயில்களை நெரிசல் இல்லாத நேரத்தில் இயக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கூடுதலாகத் தேவைப்படும் பெட்டிகளைக் கணக்கிட்டு ரூ.2,820.90 கோடியில் ஆறு பெட்டிகள் கொண்ட 28 ரயில்களை கொள்முதல் செய்ய மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து நிதி பெற்று கொள்முதல் செய்யும் இந்த முடிவுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ராஜ்
இரவில் நடந்த சேஸிங் – போலீஸிடம் பேரம் : சந்தன மர கடத்தல் லாரி பிடிபட்டது எப்படி?
Comments are closed.