டெல்லி சிபிஐ அலுவலகத்தில் 2-வது நாளாக 6.30 மணி நேரம் விசாரணை! நாளையும் தொடரும்!

Published On:

| By Mathi

CBI Karur Probe

41 பேரை பலி கொண்ட கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மற்றும் அரசு, காவல்துறை அதிகாரிகளிடம் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 30) 2-வது நாளாக சுமார் 6.30 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடைபெற்ற விஜய் பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரித்து வருகிறது. சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே கரூரில் முகாமிட்டு 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

ADVERTISEMENT

இதனையடுத்து தற்போது டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் அடுத்த கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று (டிசம்பர் 29) சுமார் 9 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் நடந்தது என்ன என்பதை நமது மின்னம்பலத்தில் விரிவாக பதிவு செய்துள்ளோம்.

இதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது. தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், மதியழகன்; கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு, கரூர் எஸ்பி ஜோஷ் தங்கையா உள்ளிட்டோர் இன்று காலை 10 மணிக்கு டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். இன்றும் விரிவான விசாரணையை சிபிஐ அதிகாரிகள் நடத்தினர். இன்று 2-வது நாளாக சுமார் 6.30 மணி நேரம் விசாரணை நடந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து நாளை டிசம்பர் 31-ந் தேதி 3-வது நாளாகவும் விசாரணை நடைபெற உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share