ஒரே மேடையில் சிம்பு, சந்தானம், ஆர்யா… மாறி மாறி சீக்ரெட்டை உடைத்த நடிகர்கள்!

Published On:

| By christopher

simbu santhanam arya speech in dd next level

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இப்படத்தை நடிகரும், சந்தானத்தின் நண்பருமான ஆர்யா தயாரித்துள்ளார். simbu santhanam arya speech in dd next level

இதில் செல்வராகவன், கெளதம் மேனன், கீதிகா, யாஷிகா ஆனந்த், கஸ்தூரி, நிழல்கள் ரவி, ரெடின் கிங்ஸ்லி, மாறன் மற்றும் மொட்டை ராஜேந்திரன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வரும் மே 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், நேற்று (மே 5) சத்யம் திரையரங்கில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில், ஆர்யா, சந்தானத்துடன் சிறப்பு விருந்தினராக நடிகர் சிலம்பரசன் கலந்துகொண்டார்.

இனி காமெடி படங்களில் சந்தானம் இருப்பார்!

அப்போது சிம்பு பேசுகையில், “தில்லுக்கு துட்டு, டிடி முந்தைய பாகங்கள் என்ஜாய் செய்து பார்த்தேன். சந்தானம் என் நண்பராக இருந்தாலும், நான் ரசிகனாக பார்த்தேன். இதில் சந்தானம் கலக்கி இருக்கிறார். அவர் பாடி லாங்குவேஜ் நன்றாக இருக்கிறது. படத்தை தயாரித்த ஆர்யாவுக்கு இந்த படம் வெற்றி படமாக அமைய வேண்டும். மன்மதன் காலத்திலேயே சந்தானம் ஒரு 3 பேர் டீமை வைத்திருப்பார். அன்று முதல் இன்று வரை அந்த டீம் இருக்கிறது. அந்த உழைப்பு அப்படியே தொடர்கிறது.

ரெடின் கிங்ஸ்லியை கோலமாவு கோகிலா காலத்தில் உங்களுக்கு தெரியும். எனக்கு அவரை வேட்டை மன்னன் காலத்தில் இருந்தே தெரியும். அவர் பெரிய ஆள் ஆவார் என அப்போது சொன்னேன். அதை கேட்டு அந்த பட இயக்குனர் நெல்சன் சிரிப்பார். இப்ப அவர் படங்களில் கிங்ஸ்லி இல்லாமல் இல்லை.

எஸ்.டி.ஆர் 49 படத்தில் ஏன் சந்தானம் என்று கேட்கிறார்கள்? இப்போது தமிழ் சினிமாவில் காமெடி படங்கள் குறைந்து விட்டது. ஆக்ஷன் படங்கள் அதிகம் வருகிறது. பீல் குட், ஹேப்பி ஆன படங்கள் வர வேண்டும்.

சரி அடுத்த படத்தில் சந்தானம் நடிப்பாரா?னு பலர் கேட்டார்கள். நான் போன் பண்ணினால் போதும் என்றேன். அது நடந்தது. அதேபோல் அவர் போன் செய்ததால் நான் இந்த விழாவுக்கு வந்தேன். இனி தொடர்ச்சியாக காமெடி படங்களில் சந்தானம் நடிக்கணும். இனி அவர் அதிக படங்களில் நடிப்பார்” என்று சிம்பு பேசினார்.

பட பட்ஜெட்டைவிட சந்தானத்தோட பிரச்னை பெருசு!

படத்தின் தயாரிப்பாளர் ஆர்யா பேசுகையில், “படத்துக்காக பிரேம் ஆனந்த் சொன்ன ஐடியா ரொம்பவே புதிதாக இருந்தது. இந்தப் படத்தின் முழுக் கதை பெரிதாக வந்தது. பட்ஜெட்டாகவும் தற்போது பெரிய படமாக வந்துள்ளது. அப்புறம் படத்திற்குள் நிகாரிகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வந்தார்கள்.

அவர்களிடம் ‘சந்தானத்துக்கு நிறைய பிரச்னை இருக்கு. அதை நீங்க தீர்த்து வச்சா நிம்மதியாக வேலை பார்ப்பான்’னு சொன்னேன். அதை கேட்டுட்டு படத்தோட பட்ஜெட்டைவிட சந்தானத்தோட பிரச்னை பெருசா இருக்கு என்று அவர்கள் சொன்னார்கள்.

படம் ரொம்பவே அழகாக வந்திருக்கு. சினிமாவை தாண்டி இந்தப் படத்துல நட்புக்காக பலர் பல விஷயங்கள் பண்ணியுள்ளனர். குறிப்பாக கெளதம் மேனன் சாரும், செல்வராகவன் சாரும் நட்புக்காக இந்தப் படத்தை பண்ணிக் கொடுத்தார்கள். அவங்களோட இமேஜ் மற்றும் கேரக்டரை சரியாக யூஸ் பண்ணியிருக்காங்க. இந்த நிகழ்வுக்கு வந்த சிம்பு ப்ரதருக்கு நன்றி” எனப் பேசினார்.

ஆர்யா என் வீட்டை தரைமட்டமாக்கிட்டான்!

தொடர்ந்து சந்தானம் பேசுகையில், “நான் ஒரு வீட்டை வாங்கி அதை புதிதாக மாற்றலாம் என திட்டமிட்டிருந்தேன். அந்த வீட்டுக்கு என் அம்மாவும், மனைவியும் வெள்ளிக் கிழமை தோறும் சென்று விளக்குப் போட்டு வருவார்கள். ஒரு நாள் ஆர்யா அந்த வீட்டைப் பார்க்க வந்தான். வீட்டைப் பார்த்துவிட்டு ‘மச்சான் இந்த வீடு சரியில்ல. இத இடிச்சிட்டு புது வீடு கட்டு’ என்றான். உடனே யாருக்கோ ஒருவருக்கு போன் செய்தான், அவர் வந்து பார்த்தார். அடுத்தடுத்த நாட்களில் வீட்டை இடித்து தரைமட்டமாக்கி விட்டனர்.

இது தெரியாமல் வழக்கம்போல், வெள்ளிக்கிழமை எங்க அம்மாவும், மனைவியும் அந்த வீட்டுக்கு சென்றனர். ஆனால் வீட்டைக் காணவில்லை. உடனடியாக போன் செய்து, ‘ஆர்யா சொன்னதை சொன்னேன்”. அதைக் கேட்டு ஷாக் ஆன அவர்கள் “டேய் நீங்க படத்துலதானடா இப்படியெல்லாம் பண்ணுவீங்க. நெஜத்துலயுமா? என்று கேட்டனர்” என ஜாலியாக சந்தானம் பேசினார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share