சப்-இன்ஸ்பெக்டர் பணி : சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Kavi

si post tnsurb important announcement

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. si post tnsurb important announcement

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிகளுக்கான நேரடி தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு 07.04.2025 முதல் 03.05.2025 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருந்தது. 

இந்தசூழலில்  இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்,  “சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் 24.04.2025 அன்று பிறப்பித்த உத்தரவின்படி, 9 ஆம் வகுப்பு பயிலாமல் நேரடியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலாமல் நேரடியாக 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மனுதாரர்களின் இணையவழி நேரடி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள பிறப்பித்துள்ளது. 

மேற்கூறிய உத்தரவை தொடர்ந்து அதே நிலையில் உள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தளர்வை நீட்டிக்க இவ்வாரியம் முடிவு செய்துள்ளது. இருப்பினும், அவர்களின் தேர்வு நடைமுறைகள் மேற்கூறிய ஆணையின் இறுதி முடிவுக்கு உட்பட்டது. 

அதன்படி, விண்ணப்பத்திற்கான கால அட்டவணை பின்வருமாறு திருத்தப்பட்டுள்ளது. இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி தேதி 10.05.2025 சமர்ப்பிக்கப்பட்ட இணையவழி விண்ணப்பத்தை திருத்துவதற்கான கடைசி தேதி -15.05.2025” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. si post tnsurb important announcement

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share