”இந்த சாதனைக்கு சுப்மன் கில் தான் காரணம்” – சூர்யவன்ஷி தந்தை சொன்ன சூப்பர் தகவல்!

Published On:

| By christopher

shubman gill is the reason for my son cricket - vaibhav suryavanshi father

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஒரே நாள் இரவில் வைபவ் சூர்யவன்ஷி என்ற 14 வயதான வீரரின் பெயரை திரும்ப திரும்ப உச்சரித்து வருகிறது. shubman gill is the reason for my son cricket – vaibhav suryavanshi father

ஜெய்ப்பூரில் நேற்று (ஏப்ரல் 28) இரவு நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் 17 பந்துகளில் அரைசதம்… 35 பந்துகளில் சதம் என மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த கிரிக்கெட் வீரர்களையும் கலங்கடித்தார் 14 வயதான வைபவ் சூரியவன்ஷி.

எதிர்த்து விளையாடிய குஜ்ராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில், பவுலர்களை மாறி மாறி பந்துவீச வைத்தாலும், அவரின் அனைத்து திட்டங்களையும் தவிடு பொடியாக்கி சாதனை படைத்தார் வைபவ்.

தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் மற்றும் ஆடவர் டி20 வரலாற்றில் மிக இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் கிறிஸ் கெயிலுக்கு பிறகு குறைந்த பந்தில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

இதனையடுத்து அவருக்கு உலக முழுவதும் உள்ள கிரிக்கெட் ஜாம்பவான்களும், விளையாட்டு ஆர்வலர்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

மேலும் உலகமே கொரோனாவில் சிக்கி தவித்தபோது, 10 வயது சிறுவனாய் தன் வீட்டு மாடியில் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வந்த சூர்யவன்ஷியின் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

யார் இந்த சூர்யவன்ஷி? shubman gill is the reason for my son cricket – vaibhav suryavanshi father

பீகாரின் விவசாய பூமியாக கருதப்படும் சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான வைபவ் சூர்யவன்ஷி கிரிக்கெட்டில் இப்படியொரு சாதனையை படைத்தது எப்படி? அவரது பின்புலம் என்ன? என்ற கேள்வி பலருக்கும் தற்போது எழுந்துள்ளது.

கிரிக்கெட்டில் சாதனை படைத்து வரும் இளம் வீரர்களான சுப்மன் கில், சர்பராஸ் கான், பிரித்வி ஷா மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரை கூர்ந்து கவனித்தால் ஒன்று நிச்சயம் வெளிபடும். அது அவர்கள் தங்கள் தந்தையின் வழிகாட்டலில், அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற போராடி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வெற்றி கண்டனர்.

அந்த வரிசையில் தனது தந்தையின் நிறைவேறாத கிரிக்கெட் ஆசையை நிறைவேற்ற துடித்தவர் தான் சூர்யவன்ஷி. அவர் ஆசைப்பட்டபடியே தனது அபார பேட்டிங் திறமையால் 14 வயதிலேயே கிரிக்கெட் உலகிற்கு பிரபலம் ஆகியுள்ளார்.

ஜெய்ப்பூரில் சிக்சர் மழை பொழிந்து கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ள சூர்யவன்ஷி குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு இன்று பேட்டி கொடுத்துள்ளார் அவரது தந்தை சஞ்சீவ்.

வைபவ் சூர்யவன்ஷியின் பெற்றோர்

தீபாவளி போன்று உணர்கிறோம்! shubman gill is the reason for my son cricket – vaibhav suryavanshi father

அவர் கூறுகையில், “நேற்று சூர்யவன்ஷியின் ஆட்டத்தை பார்த்ததும், இரவே எங்களது வீட்டில் உறவினர்கள் குவிந்துவிட்டனர். வைபவின் நண்பர்கள் தெருக்களில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

வைபவ் வெறும் 35 பந்துகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி பெற உதவினார். அவரது ஆட்டத்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். எங்கள் வீட்டில் இப்போது தீபாவளி போன்ற ஒரு பண்டிகை சூழல் நிலவுகிறது” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். shubman gill is the reason for my son cricket – vaibhav suryavanshi father

தொடர்ந்து அவர், “எனக்கு சிறுவயது முதலே கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் உண்டு. எப்படியாவது என் மகனை கிரிக்கெட் வீரனாக ஆக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.

கடந்த 2020-21ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியின் போது, ​​சுப்மன் கில் கப்பாவில் அச்சமின்றி 91 ரன்கள் குவித்தார். அப்போது சுப்மன் கில்லின் தந்தை பஞ்சாபின் ஃபாசில்காவில் உள்ள சிமென்ட் பிட்சில் அவருக்கு எப்படி பயிற்சி அளித்தார் என்பது பற்றி ஒரு செய்தித் தாளில் படித்தேன்.

அது என்னைக் கவர்ந்தது. எனவே அதே போன்று வைபவ் பயிற்சி பெறுவதற்காக என் வீட்டு கொல்லைப்புறத்தில் ஒரு சிமெண்ட் பிட்ச் உருவாக்கினேன். அங்கு தான் அவர் பயிற்சியை தொடங்கினார்.

நேற்று சுப்மன் கில் தலைமையிலான அணிக்கு எதிராகவே வைபவ் அதிரடி சதம் கண்டது உண்மையில் ஆச்சரியமாக உள்ளது.

மிக இளம் வயதில் டி20யில் சதம் அடித்த வீரர் என்ற பெயரை பெறுவதற்கு அவர் கடினமாக உழைத்தார். அவர் இப்படி சூப்பர் வீரராக மாற்றிய பெருமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திற்கே சேர வேண்டும். கடந்த மூன்று முதல் நான்கு மாதங்களாக, ராகுல் டிராவிட், விக்ரம் ரத்தோர் மற்றும் ஜூபின் பருச்சா ஆகியோர் அவருக்கு தொடர்ந்து பயிற்சியளித்து வந்தனர். இப்போது அவர் அதற்கான பலனை அனுபவித்து வருகிறார்” என சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.

பெற்றோர்தான் உண்மையான உந்து சக்திகள்! shubman gill is the reason for my son cricket – vaibhav suryavanshi father

அதே போன்று வைபவின் ஆஸ்தான பயிற்சியாளர் மணீஷ் ஓஜா கூறுகையில், “தனது சிறு வயதிலேயே தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) விவிஎஸ் லட்சுமணுடனும், ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிடுடனும் பணியாற்றும் அதிர்ஷ்ட வாய்ப்பை பெற்றார் வைபவ் சூரியவன்ஷி.

லக்ஷ்மன் சார் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது வளர்ச்சியை உன்னிப்பாகக் கண்காணித்து வந்தார். அவரை ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ராகுல் டிராவிட்டிற்கு பரிந்துரைத்தவரும் விவிஎஸ் லட்சுமணன் தான்.

அதன்படி 2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக நாக்பூரில் நடந்த சோதனை போட்டிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் வைபவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு அவர் சிறப்பாக விளையாடியதை டிராவிட் கண்டுகொண்டார். shubman gill is the reason for my son cricket – vaibhav suryavanshi father

தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.30 லட்சம் அடிப்படை விலை கொண்ட வைபவ் சூர்யவன்ஷியை எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இறுதியில் அவரை 1.1 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் அணி நிர்வாகம். இப்போது தன் மீது நம்பிக்கை வைத்ததற்கான காரணத்தை தனது அபார பேட்டிங் மூலம் நிரூபித்துள்ளார் வைபவ்.

வைபவ் கிரிக்கெட் வளர்ச்சியில் அவரது பெற்றோர் பங்களிப்பு மிக முக்கியமானது. அவரது தாயார் அதிகாலை 4 மணிக்கு எழுந்து வைபவுக்கு உணவு தயாரிப்பார். அவரது தந்தை பயிற்சிகள் மற்றும் போட்டிகளுக்காக அவருடன் சென்றார். நாங்கள் பயிற்சியாளர்களாக எங்கள் வேலையைச் செய்தோம். ஆனால் அவரது பெற்றோர்தான் உண்மையான உந்து சக்திகள். வைபவின் தந்தையும் கிரிக்கெட் விளையாட சிறு வயதில் ஆசைப்பட்டார். ஆனால் அவரால் முடியவில்லை. எனவே, அவர் தனது மகன் மூலம் தனது கனவை தற்போது நிறைவேற்றியுள்ளார்” என்கிறார் மணிஸ் ஓஜா.

அவரது பேச்சுக்கு சற்றும் குறைவில்லாமல் மகிழ்ச்சி பொங்க பேசுகிறார் ராஜஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரத்தோர்.

அவரிடம் அசாதாரணமான ஒன்று உள்ளது! shubman gill is the reason for my son cricket – vaibhav suryavanshi father

அவர் கூறுகையில், “வைபவ் சூர்யவன்ஷி ஒரு சிறப்புத் திறமைசாலி. தொழில்நுட்ப ரீதியாக, அவரிடம் ஒரு சிறந்த டவுன்ஸ்விங் உள்ளது. அது தான் அவருக்கு அதிரடியாக பேட்டை சுழற்ற உதவுகிறது. இன்று தான் எவ்வளவு சிறந்த பேட்ஸ்மேன் என்பதை அனைவருக்கும் சரியாகக் காட்டினார். இன்னும் சரியாகச் சொன்னால், அவரது பேட்டிங்கைப் பற்றி நீங்கள் முடிவில்லாமல் பேசிக்கொண்டே இருக்கலாம்” என ரத்தோர் தெரிவித்தார்.

மேலும் அவர், “ஒரு 14 வயது குழந்தை இப்படி விளையாடுவது சிறப்பு. நான்கு மாதங்களுக்கு முன்பு சோதனை போட்டியின் போது தான் நாங்கள் அவரை முதன்முதலில் பார்த்தோம், அந்த தருணத்திலிருந்தே, நாங்கள் அவரிடம் அசாதாரணமான ஒன்று உள்ளது என்பதை கண்டறிந்தோம். அவரை இன்னும் சிறப்பான வீரராக கொண்டுவருவது எங்கள் பொறுப்பு. நேற்றைய போட்டியில் பதற்றத்தை காட்டாமல், தெளிவான மனநிலையுடன் அவர் பேட்டிங் செய்தார். யாருமே எதிர்பார்க்காத ஒரு அசாதாரண இன்னிங்ஸை விளையாடினார்” என்று ரத்தோர் தெரிவித்தார். shubman gill is the reason for my son cricket – vaibhav suryavanshi father

சச்சின், தோனி வரிசையில் சூர்யவன்ஷி

சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தைக் கண்ட கிரிக்கெட் நிபுணர்கள் தற்போது அழகான ஒப்பீட்டை முன்வைக்கின்றனர்.

36 ஆண்டுகளுக்கு முன்னால் 16 வயது சிறுவனாய், அதிவேக பவுலர்களை கொண்ட பாகிஸ்தான் அணிக்கு எதிராக கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் எப்படி அறிமுகம் ஆனாரோ,

20 வருடங்களுக்கு முன்னால் அதே பாகிஸ்தானுக்கு எதிராக ஜார்க்கண்டில் இருந்து வந்த தோனி எப்படி தனது முதல் சதத்தை பதிவு செய்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டாரோ,

இன்று அதே போன்று வெறும் 14 வயதில் அதிவேக சதமடித்து கிரிக்கெட் உலகை ஆச்சரியப்பட வைத்தது மட்டுமின்றி, முழுவதுமாக ஈர்த்துள்ளார் பீகாரின் வைபவ் சூர்யவன்ஷி.

இதன்மூலம் எதிர்கால இந்திய கிரிக்கெட்டின் அடையாளம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள அவர், வரும் நாட்களில் மேலும் பல சாதனைகள் புரிந்து இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு! shubman gill is the reason for my son cricket – vaibhav suryavanshi father

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share