அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று (மே 2) இரவு நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொண்டது குஜராத் டைட்டன்ஸ் அணி. shubman gill fight with umpires and defeat the srh
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளுக்கு 224 ரன்கள் குவித்தது.
சர்ச்சை ரன் அவுட்! shubman gill fight with umpires and defeat the srh
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 76 ரன்கள் குவித்தார். ஆனால் அவர் ரன் அவுட் செய்யப்பட்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆட்டத்தின் 13வது ஓவரில் அன்சாரி பந்துவீச்சில் ஜோஸ் பட்லர் ஷார்ட் ஃபைன் லெக் திசையில் பவுண்டரிக்கு அடித்த பிறகு அவர் வேகமாக ஒரு ரன்னுக்கு ஓடினார். மறுமுனையில் இருந்து கில் ஓடி வர, ஹர்ஷல் படேல் பந்தை விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசனிடம் வீச, அதை பிடித்து ஸ்டம்புகளுக்கு முன்னால் நின்று, தனது கையுறையால் ஸ்டம்பிங் செய்ய முயன்றார்.
இந்த ரன் அவுட் சரியாக தெரியாத காரணத்தால் அவுட்டா? நாட் அவுட்டா என குழப்பம் ஏற்பட்டது. இதனால் நீண்ட நேரம் 3வது நடுவர் எடுத்துக்கொண்டார். எனினும் அவர் கிளாசனின் கையுறைகள் ஸ்டம்புகளைத் தொட்ட பிறகு பந்து ஸ்டம்புகளைத் தொட்டதாக உறுதிப்படுத்தினார். இதனால் கில் அவுட் என அறிவிக்கப்பட்டார்.
இந்த முடிவால் அதிர்ச்சியடைந்த கில் டிவி நடுவர் மைக்கேல் கௌத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
மீண்டும் வாக்குவாதம்! shubman gill fight with umpires and defeat the srh
அதே போன்று 224 என்ற இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி தடுமாறியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா பொறுமையாக ஆடி அரைசதம் அடித்தார்.
தொடர்ந்து அவர் விளையாடிய நிலையில், 14வது ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணாவின் யார்க்கர் பந்து அபிஷேக் சர்மாவின் ஷூவில் பட்டதால் அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதற்கு குஜராத் அணியின் கேப்டன் கில் எல்பிடபிள்யூ ரிவ்யூ கேட்டார். ஆனால் மூன்றாவது நடுவர் நாட் அவுட் என அறிவித்தார்.
இதனால் அமைதியை இழந்த சுப்மன் கில் அப்போதும் கள நடுவர் வீரேந்தர் சர்மாவுடன் சில நிமிடங்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். களத்தில் இருந்த அபிஷேக் சர்மாவும் அவுட் இல்லை என்று அவரிடம் எடுத்துக்கூற, அதை கேட்காமல் கில் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
கில்லின் இந்த வாக்குவாதத்தால் கவனம் சிதறிய அபிஷேக் சர்மா 15வது ஓவரை வீசிய சிராஜின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவரில் 186 ரன்கள் மட்டும் எடுக்கவே, குஜராத் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. இந்த தோல்வியின் மூலம் சன்ரைசர்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு ஏறக்குறைய மங்கிவிட்டது எனலாம்.
வாக்குவாதம் ஏன்?
இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு நடுவர்களுடனான மோதல் குறித்து பேசிய கில், ”எனக்கும் நடுவருக்கும் இடையே சிறிது விவாதம் நடந்தது, சில நேரங்களில் நீங்கள் உங்கள் 110 சதவீத உழைப்பை கொடுக்கும்போது அங்கு நிச்சயமாக உணர்ச்சிவசப்பட நேரிடும்” என்று தெரிவித்தார்.