ADVERTISEMENT

எடப்பாடி புதிய கார் வாங்கியது ஏன்? – செல்லூர் ராஜூ பதில்!

Published On:

| By Selvam

வேகமாக சென்று மக்களை சந்திக்க வேண்டும் என்பதால் எடப்பாடி பழனிசாமி புதிய கார் வாங்கியுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர், கழிவு நீர், பாதாள சாக்கடை, சாலை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநகராட்சி ஆணையர் பிரவீன்குமாரிடம் அதிமுக மாமன்ற உறுப்பினர்களுடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று (ஜூலை 4) கோரிக்கை மனு அளித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, “மாநகராட்சி நிர்வாகம் மெத்தனமாக நடைபெறுகிறது. மாநகராட்சியை மேம்படுத்த தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மாநகராட்சியை குற்றம் சாட்டி எம்.எல்.ஏ, துணை மேயர் ராஜினாமா செய்வதாக அறிவித்ததில் இருந்தே மாநகராட்சியின் நிலை அனைவருக்கும் தெரியும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

வேகமாக சென்று மக்களை சந்திக்க வேண்டும் என்பதால் எடப்பாடி பழனிச்சாமி புதிய கார் வாங்கி உள்ளார். அதிமுக வெற்றி பாதையை நோக்கி பயணிக்கிறது. திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அரசுக்கு எதிராக வாயே திறக்கவில்லை என்றாலும் கூட கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீடு செய்யும்போது தான் கட்சிகள் திமுக கூட்டணியில் இருக்குமா என தெரிய வரும். தேர்தல் நேரத்தில் அதிமுக கூட்டணி முடிவு செய்யப்படும். கூட்டணி விவகாரத்தில் தமிழக மக்கள் நலன் கருதி ஜெயலலிதா போல தைரியமான முடிவுகளை எடப்பாடி பழனிச்சாமி எடுப்பார்” என்றவரிடம்

ADVERTISEMENT

மாமன்னன் திரைப்படம் பார்த்தீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “மாமன்னன் படம் பார்க்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை” என்று தெரிவித்தார்.

செல்வம்

ADVERTISEMENT

கர்நாடகா காவிரி நீரை திறந்துவிட வேண்டும்: துரை முருகன்

செந்தில்பாலாஜி வழக்கில் நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு: அடுத்து என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share