தமிழகத்தில் கனமழை இடைவிடாமல் வெளுத்து வாங்குவதால் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று நவம்பர் 24-ந் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடலில் நவம்பர் 22-ந் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது; இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடைந்து ‘சென்யார்’ புயலாக உருவாகக் கூடும்.
அதேபோல குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் குமரிக்கடல்- தென்மேற்கு வங்க கடலில் புயல் சின்னமான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது; மேலும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழையும் வெளுத்து வாங்கி வருகிறது.
கனமழை பெய்கிற, கனமழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
- கோவை
- திண்டுக்கல்
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- நாமக்கல்
- திருவள்ளூர்
- ராணிப்பேட்டை
- சேலம்
- நீலகிரி
- திருப்பூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- கன்னியாகுமரி
- நெல்லை
- தென்காசி
- தூத்துக்குடி
- ராமநாதபுரம்
- புதுக்கோட்டை
- தேனி
- திருச்சி
- பெரம்பலூர்
- அரியலூர்
- கரூர்
- கடலூர்
- மதுரை
இதனையடுத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்த மாவட்டங்கள்
- கன்னியாகுமரி
- தூத்துக்குடி
- திருநெல்வேலி
- தென்காசி
- விருதுநகர்
- ராமநாதபுரம்
- புதுக்கோட்டை
- திருச்சி
- அரியலூர்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- மயிலாடுதுறை
- நாகை
- கரூர்
- கள்ளக்குறிச்சி
- மதுரை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும்
- கொடைக்கானலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
- சேலத்தில் 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
