ADVERTISEMENT

1.25 லட்சம் ரூபாய் வரை ஸ்காலர்ஷிப்: பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ‘மத்திய’ ஜாக்பாட்! உடனே அப்ளை பண்ணுங்க!

Published On:

| By Santhosh Raj Saravanan

Scholarship for OBC EBC and DNT students

சென்னை/கோயம்புத்தூர்:

“பணம் இல்லை என்பதற்காகப் படிப்பு நிற்கலாமா?” என்ற கவலை பல ஏழைப் பெற்றோர்களின் மனதில் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு மத்திய அரசு ஒரு வரப்பிரசாதமான திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில் பிரதமரின் ‘யஜஸ்வி’ (PM-YASASVI) கல்வி உதவித்தொகைத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தற்போது 2024-25 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால், தகுதியுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை நழுவ விடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ADVERTISEMENT

இந்த உதவித்தொகையைப் பெற மாணவர்கள் மூன்று முக்கியத் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:

வகுப்பு: இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC), பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்கள் (EBC) மற்றும் சீர்மரபினர் (DNT) பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

படிப்பு: தற்போது 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வருமானம்: பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

எவ்வளவு பணம் கிடைக்கும்?

இந்தத் திட்டத்தின் மிகப் பெரிய ‘ஹைலைட்’ அதன் உதவித்தொகை தான்.

9, 10ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரை உதவித்தொகை கிடைக்கும்.

11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1,25,000 வரை உதவித்தொகை வழங்கப்படும்.

இது பள்ளிக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணத்தைச் செலுத்தப் பேருதவியாக இருக்கும்.

தேர்வு முறை எப்படி?

முன்பு இதற்குத் நுழைவுத் தேர்வு (Entrance Exam) இருந்தது. ஆனால், சமீபத்திய நடைமுறையின்படி, மாணவர்கள் முந்தைய வகுப்பில் (8ஆம் வகுப்பு அல்லது 10ஆம் வகுப்பு) பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் (Merit Basis) பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.

விண்ணப்பிப்பது எப்படி?

விருப்பமுள்ள மாணவர்கள் மத்திய அரசின் தேசிய ஸ்காலர்ஷிப் இணையதளமான (National Scholarship Portal) scholarships.gov.in என்ற முகவரிக்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ் (Mark Sheet), வங்கி கணக்கு விவரங்கள் (Bank Passbook). “அரசுப் பணம் சும்மா கிடைக்காது, அலைய வேண்டும்” என்று நினைக்காமல், முறையாக விண்ணப்பித்தால், உங்கள் வங்கிக் கணக்கிற்குத் தானாகவே பணம் வந்து சேரும். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி, கூடுதல் விவரங்களை இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share