பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதால், அடுத்தடுத்த வாரங்களில் வரப்போகும் நாமினேஷன்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
வீட்டினுள் மாயா, பூர்ணிமா, அர்ச்சனா, விசித்ரா, சரவண விக்ரம், ரவீனா, மணி சந்திரா, விஷ்ணு விஜய், விஜய் வர்மா, தினேஷ் மற்றும் நிக்ஸன் என மொத்தம் 11 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
இதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போகும் அந்த டாப் 5 போட்டியாளர்கள் யார்? என்பது தான் தற்போது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.
இதில் பூர்ணிமா, அர்ச்சனா, மணி சந்திரா, விஷ்ணு விஜய், தினேஷ் ஆகிய ஐந்து பேரும் இறுதி போட்டிக்கு முன்னேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
https://twitter.com/itzSekar/status/1736657078738186415
இந்த நிலையில் இன்று (டிசம்பர் 18) பிக்பாஸ் வீட்டினுள் நடந்த நாமினேஷனில் சரவண விக்ரம், ரவீனா, விசித்ரா ஆகிய 3 பேரும் 3 வாக்குகளுக்கு மேல் பெற்று இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
இதில் ஒருவர் தான் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவார் என்பதால், அந்த ஒரு போட்டியாளர் யாராக இருக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதில் ரவீனா அல்லது சரவண விக்ரம் இருவரில் ஒருவர் வாக்கெடுப்பின் அடிப்படையில் வீட்டில் இருந்து வெளியேறலாம்.
ஆனால் ரசிகர்களின் டார்கெட் என்னவோ சரவண விக்ரம் மீது தான் உள்ளது. எனவே அவர் இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேற வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
”மீட்க முடியாத நிலையில் தூத்துக்குடி கிராமங்கள்”: மாரி செல்வராஜ் வேண்டுகோள்!
தோட்டத் தொழிலாளர்கள் தொழில்துறை அடிமைகளாக மாறியது எப்படி? – பாகம் 1!