8வது சம்பள கமிஷன் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துவிட்டன. 7வது சம்பள கமிஷன் டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைகிறது. புதிய கமிஷனுக்கு 18 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், திருத்தப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதியம் 2027ஆம் ஆண்டின் பிற்பகுதியிலோ அல்லது 2028ஆம் ஆண்டின் தொடக்கத்திலோதான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 8வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்டால், 50 லட்சத்திற்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் சுமார் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மாற்றி அமைக்கப்படும்.
இறுதி அமலாக்க தேதி மற்றும் நிதி விவரங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், விவாதங்களில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு காரணி பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு ஆகும். முந்தைய சம்பள திருத்தங்களைப் போலல்லாமல், சமீபத்திய ஆண்டுகளில் குடும்பங்களின் செலவு முறை கடுமையாக மாறியுள்ளது. பணவீக்கம் பொதுவாக கட்டுப்பாட்டில் இருந்தாலும், குறிப்பாக நகரங்களில் அன்றாட செலவுகள் சீராக உயர்ந்துள்ளன.
வேலை செய்யும் குடும்பங்களுக்கு வீட்டு வாடகை ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு பிரச்சினைகள் 8வது சம்பள கமிஷனின் பரிசீலனைக்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கும், குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் செலவினங்களின் தன்மை மாறியுள்ளது.
வீட்டுச் செலவுகளில்தான் இந்த அழுத்தம் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக நகர்ப்புறங்களில் வாடகை, வீட்டுக் கடன் EMI, பராமரிப்பு கட்டணங்கள் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் அனைத்தும் உயர்ந்துள்ளன. “வீட்டுச் செலவுகளைப் பொறுத்தவரை, பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருந்தாலும், உழைக்கும் வர்க்க குடும்பங்கள் மீதுள்ள அழுத்தம் தெளிவாகத் தெரிகிறது. சம்பள உயர்வு உண்மையான வாழ்க்கைச் செலவுகளுக்கு ஈடுகொடுக்கவில்லை என்றால், அது சேமிப்பு, செலவு பழக்கவழக்கங்கள் மற்றும் நீண்ட கால நிதி நிலைத்தன்மையை பாதிக்கலாம்.
8வது சம்பள கமிஷன் அமலாக்கத்தில் தாமதம் ஏற்பட்டாலும் நிலுவைத் தொகை இழக்கப்படாது. 7வது சம்பள கமிஷன் முடிவடையும் தேதியாக நிர்ணயிக்கப்பட்ட ஜனவரி 1, 2026 முதல் அரியர்ஸ் கணக்கிடப்படும். கமிஷனின் பரிந்துரைகள் அங்கீகரிக்கப்பட்ட பிறகு தாமதமாக பணம் செலுத்தப்பட்டாலும் இது பொருந்தும்.
இப்போதைக்கு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். ஆனால் 8வது சம்பள கமிஷன் இறுதியாக வடிவம் பெறும்போது பணவீக்கம், குறிப்பாக நகர்ப்புற வாழ்க்கையின் உண்மையான செலவு, இறுதி சம்பள உயர்வை வலுவாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
