இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் தேவிபாரதிக்கு அதிகாரப்பூர்வமாக இன்று (டிசம்பர் 20) அறிவிக்கப்பட்டுள்ளது. writer devi bharathi
ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையை சேர்ந்தவர் எழுத்தாளர் ராஜசேகரன் தேவி பாரதி. கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் இலக்கியத்தில் பங்களிப்பு வழங்கி வரும் இவர், நிழலின் தனிமை, அற்ற குளத்து அற்புத மீன்கள், பிறகும் ஒரு இரவு, நொய்யல், நட்ராஜ் மகராஜ் உள்ளிட்ட நாவல்கள் மற்றும் ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி, தேவிபாரதி எழுதிய ’நீர்வழி படூஉம்’ என்ற நாவல் சாகித்ய அகாடாமி விருதுக்குத் தேர்வாகி இருப்பதாக தகவல் வெளியான நிலையில், முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு சாகித்ய அகாடமி விருது தேர்வு குழு மறுப்பு தெரிவித்திருந்தனர்.
இதனை பயன்படுத்திக் கொண்ட தேவிபாரதியின் எதிர்த்தரப்பு, “ஒரு மாநிலத்தின் முதல்வர் அதிகாரப்பூர்வ விருது அறிவிக்கப்படுவதற்கு முன்னர் வாழ்த்து தெரிவிப்பது, அந்த விருது வழங்கப்படுவதில் சந்தேகத்தை ஏற்படுத்தும். எனவே இந்த வருடம் சாகித்ய அகாடமி விருது அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தது.
ஆனால் அதனை ஏற்க மறுத்த சாகித்ய அகாடமி விருது தேர்வு குழு, ’நீர்வழி படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் ராஜசேகரன் தேவிபாரதிக்கு விருது வழங்கப்படுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்மூலம் தேவிபாரதிக்கு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்த அட்வான்ஸ் வாழ்த்து 9 நாட்களுக்கு பிறகு உறுதியாகியுள்ளது.
மத்திய அரசால் வழங்கப்படும் இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதானது 2023 ஆண்டு இறுதியில் டெல்லியில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாதவற்கு முன் முதல்வர் வாழ்த்து சொன்னது விமர்சிக்கப்பட்ட நிலையில் அவர் அந்த பதிவை நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
கீர்த்தி சுரேஷின் ’ரகு தாத்தா’ ரிலீஸ் அப்டேட்!
அமைச்சர்களிடம் பேசுவதை தவிர்த்த பொன்முடி… தைரியம் சொன்ன மனைவி!
சனிப்பெயர்ச்சி : திருநள்ளாறில் விடிய விடிய கோயில் நடை திறப்பு!
writer devi bharathi