இந்தோனேஷியா ஓபன்: இறுதிப்போட்டியில் இந்திய இணை

Published On:

| By Monisha

S. Rankireddy C. Shetty

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய இணை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

நடப்பாண்டு இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜூன் 13 ஆம் தேதி தொடங்கியது. இதில் இந்தியாவின் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையும் ஒலிம்பிக் பதக்கத்திற்கு சொந்தக்காரருமான பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றோடு வெளியேறினார்.

தொடர்ந்து லக்‌ஷயா சென், கிடம்பி ஸ்ரீகாந்த், ரஜாவத் ஆகிய வீரர்களும் அடுத்தடுத்த சுற்றுகளில் வெளியேறினர்.

இந்த பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிப் போட்டி இன்று (ஜூன் 17) நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் எச்.எஸ்.பிரணாயும், இரட்டையர் பிரிவில் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டியும் களமிறங்கினர்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் போட்டி முடியும் வரை வெற்றியாளர் யார் என்ற கணிக்க கூட முடியாத சூழலே இருந்து வந்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடிய எச்.எஸ்.பிரணாய் தானிஷ் வீரர் அசெல்செனிடம் 21-15, 21-15 என்ற நேர் செட்டில் மோசமான தோல்வியை சந்தித்து தொடரை விட்டு வெளியேறினார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் விளையாடிய ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டியும் நிச்சயமாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தாக வேண்டும் என்று விட்டுக் கொடுக்காமல் விளையாடினர்.

தென்கொரிய வீரர்களை எதிர்கொண்ட இவர்கள் 17-21 என்று முதல் செட் ஆட்டத்தில் வீழ்ந்தாலும், தொடர்ந்து விளையாடி 21-19, 21-18 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

இந்தோனேஷியா பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.

மோனிஷா

அமைச்சர் – எம்.பி மோதல்: கீழே தள்ளிவிடப்பட்ட கலெக்டர்

டிஜிட்டல் திண்ணை: டார்கெட் உதயநிதி… திணறும் ED: விசாரணையில் குதிக்கும் இன்னொரு ஏஜென்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share