அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தள செயலியாகவும் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாகவும், ஃபேஸ்புக்கைப் பின்னுக்குத் தள்ளி டிக்டாக் முன்னிலை பெற்றுள்ளது.
15 விநாடிகள் அடங்கிய வீடியோ பகிர்வு செயலியான டிக்டாக் இந்தியாவிலும் மிகவும் பிரபலமாகிவிட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் இருந்தாலும் அதைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டின் ஜனவரி – மார்ச் மாதங்களில் டிக்டாக் செயலியில் புதிதாக 18.8 கோடிப் பேர் இணைந்துள்ளனர். அதேபோல டிக்டாக் செயலியை 70 சதவிகிதம் கூடுதலான அளவில் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த விவரங்களை செயலிகளுக்கான ஆய்வு நிறுவனமான *சென்சார் டவர்* வெளியிட்டுள்ளது.
சர்வதேச அளவில் டிக்டாக் செயலியின் ஒட்டுமொத்த பதிவிறக்கங்களில் இந்தியாவில் 47 சதவிகிதம் அளவு பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் சீனாவின் பங்கு வெறும் 7.5 சதவிகிதம் மட்டுமே. இந்தியாவில் மட்டும் தற்போது 20 கோடிக்கும் மேலான மக்கள் டிக்டாக் செயலியைப் பயன்படுத்துகின்றனர். ஃபேஸ்புக் தளத்தில் டிக்டாக் செயலிக்கான விளம்பரங்கள் மேற்கொள்ளப்படுவதால் இதன் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கிறது. டிக்டாக் செயலிக்கு இந்தியா மிக முக்கியச் சந்தையாக இருப்பதாகவும், இதன் பாதுகாப்பு அம்சங்களில் அதிகக் கவனம் செலுத்தி வருவதாகவும் டிக்டாக் செய்தித் தொடர்பாளர் ஒருவர் *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://minnambalam.com/k/2019/05/18/7)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://minnambalam.com/k/2019/05/17/84)
**
.
**
[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://minnambalam.com/k/2019/05/17/53)
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://minnambalam.com/k/2019/05/17/27)
**
.
**
[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://minnambalam.com/k/2019/05/18/52)
**
.
.
�,”