ADVERTISEMENT

உருக்குலைந்த உக்ரைன்… ‎539 ட்ரோன்கள், 11 ஏவுகணைகள்…. ரஷ்யா உக்கிர தாக்குதல்!

Published On:

| By Minnambalam Desk


உக்ரைன் தலைநகரான கீவில் நேற்று (ஜூலை 3) இரவு முழுவதும் ரஷ்யா ட்ரோன்களால் அதிரடியாக தாக்கியுள்ளது.

‎இதில் குறைந்தபட்சம் 23 பேர் காயமடைந்ததுடன், உக்ரேனின் முக்கிய ரயில்வே முகாம்கள் சேதமடைந்தது மற்றும் நகரம் முழுவதும் கட்டிடங்கள், வாகனங்களில் தீவிபத்துகள் ஏற்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். russia attacks ukraine drones and missiles attack

‎ஐந்து அலைகளாக தொடர் தாக்குதல்கள் நடக்க, வான்வழி எச்சரிக்கை எட்டு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. ரஷ்யா மொத்தமாக 539 ட்ரோன்களையும், 11 ஏவுகணைகளையும் உக்ரைனில் ஏவி தாக்கியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்தது.

‎”தாக்குதல்களின் முக்கிய இலக்கு உக்ரைனின் தலைநகர் கீவ்” என விமானப்படை தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்தது.

‎கீவ் மேயர் விட்டாலி கிளிட்ஸ்கோ கூறியதாவது, “காயமடைந்தவர்களில் 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கீவில் உள்ள 10 மாவட்டங்களில் ஆறு மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் சேதமடைந்துள்ளதாகவும் ஹோலோசிவ்ஸ்கி மாவட்டத்தில் ஒரு மருத்துவ வசதி தீப்பிடித்து எரிந்ததாகவும்” கூறினார்.

‎இந்தத் தாக்குதல்கள், சமீபத்திய வாரங்களில் தீவிரமடைந்துள்ள கீவ் மீதான ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களின் உச்சகட்டமாகும்.

‎மேலும், முப்பது லட்சம் மக்கள் வசிக்கும் நகரத்தின் மீதான தாக்குதலால் உக்ரைனுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்படும் என்ற நோக்கிலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

‎அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வியாழக்கிழமை ரஷ்ய அதிபர் புடினுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வர எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனக் கூறினார்.

‎இந்த வாரத்தின் தொடக்கத்தில் உக்ரைனுக்கான முக்கிய ஆயுதங்களின் சில கப்பல் சேவைகளை அமெரிக்கா நிறுத்திய முடிவால், தனது பாதுகாப்புத் திறனை இது குறைக்கும் என்று உக்ரைன் எச்சரித்தது.

‎உக்ரைன் அதிபர் வொலொதிமிர் செலென்ஸ்கி ஜூலை 3 கூறுகையில், அமெரிக்க ஆயுத வழங்கல்களைப் பற்றி டிரம்புடன் இன்றைய தினம் பேச விரும்புவதாக தெரிவித்தார்.

‎உக்ரைன் மீது ரஷ்யா ஏவிய 478 விமான ஆயுதங்களை உக்ரைன் விமானப்படை அழித்ததாகவும், நாட்டின் 8 இடங்களில் எதிரி விமான தாக்குதல்கள் நிகழ்ந்ததாகவும், அதில் 9 ஏவுகணைகளும் 63 ட்ரோன்களும் அடங்கும் என விமானப்படை தெரிவித்தது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share