ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை, இந்திய அணி 3-0 என கைப்பற்றியது. பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த தொடரின் கடைசி போட்டியில், அபாரமாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சதம் விளாசி சாதனை படைத்தார்.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதை தொடர்ந்து, யசஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க, ஆப்கான் அணிக்காக ஃபரீத் அகமது முதல் ஓவரை வீசினார்.
இந்த ஓவரின் 5வது பந்தில், ரோகித் சர்மா பேட்டிங் செய்துகொண்டிருக்க, ஃபரீத் அகமது வீசிய பந்து அவரின் தை பேடில் பட்டு பவுண்டரி சென்றது. போட்டியின் நடுவர் அதை ‘லெக் பை’ என அறிவிக்க அல்ட்ரா-எட்ஜில் அந்த பந்து ரோகித் சர்மாவின் பேட்டில் பட்டு சென்றது உறுதியானது.
இந்நிலையில், இது குறித்து நடுவரிடம் ரோகித் சர்மா நகைச்சுவையாக முறையிடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த காணொளியில், “ஏய் விரு, முன்னாடி பந்தை தை பேட்-னு சொல்லிட்டியா? எவ்வளவு தெளிவா பேட்டில் பட்டு போகுது. ஏற்கனவே, இந்த சீரீஸ்-ல 2 முறை டக் அவுட் ஆகிட்டேன்”, என சிரித்தபடியே ரோகித் சர்மா அம்பையரை நோக்கி கூறுகிறார்.
🔊Agree to disagree! 😉
Skipper Rohit Sharma pleads his case to the umpire for a turned-down boundary! 🤯#GiantsMeetGameChangers #JioCinemaSports #INDvAFG #IDFCFirstBankT20ITrophy pic.twitter.com/vGmrtQgtjh
— JioCinema (@JioCinema) January 17, 2024
இந்த போட்டியில், தனது அதிரடியால் ரோகித் சர்மா 8 சிக்சர், 11 பவுண்டரியுடன் 69 பந்துகளில் 121 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!
அலங்காநல்லூர் செல்லும் ஸ்டாலின் : அமீர் வைத்த முக்கிய கோரிக்கை!