ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு : கோவையில் என்.ஐ.ஏ ரெய்டு!

Published On:

| By Kavi

கோவையில் இன்று (மே 21) தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இன்று காலை முதல் கோவை சாய்பாபா காலனியில் வசிக்கும் பயிற்சி மருத்துவர்கள் ஜாபர் இக்பால், நயன் சாதிக் ஆகியோரது வீட்டில் சோதனை நடைபெற்றது.

சுப்பண்ண கவுண்டர் வீதி, நாராயண வீதி என இவர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

பெங்களூரு என்.ஐ.ஏ அதிகாரிகள் பரிந்துரையின் பேரில் சென்னையில் இருந்து சென்ற அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல்கள் வருகின்றன.

கோவை போலீசார் உதவியுடன் இன்று காலை ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடந்த சோதனையில், மேற்குறிப்பிட்ட இருவரது செல்போன்கள் மட்டும் கைப்பற்றப்பட்டதாக என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலில் கடந்த மார்ச் 1ஆம் தேதி குண்டு வெடிப்பு நடைபெற்றது.

இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு மட்டுமின்றி அண்டை மாநிலமான தமிழகத்திலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் சென்னையில் சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தகக்து.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

Gold Rate: குறைந்த தங்கம் விலை…. எவ்வளவு தெரியுமா?

அரண்மனை 4 : தமன்னாவின் சம்பளம்  எவ்வளவு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share