நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக பிரபல ரவுடிகள் 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு நடைபயிற்சி சென்றபோது, கடத்தி செல்லப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார்.
திருச்சி போலீசாரும், பல்வேறு தனிப்படைகளும் விசாரித்த ராமஜெயம் கொலை வழக்கில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கில் துப்பு துலங்கவில்லை. இதையடுத்து சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசாரும் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
அந்த வகையில் 2012 ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திய பிரபல ரவுடிகள் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி மோகன்ராம், தினேஷ் , நரைமுடி கணேசன், சத்யராஜ், கலைவாணன், மாரிமுத்து, தீலீப் என்கிற லட்சுமி நாராயணன், ராஜ்குமார், சுரேந்தர், சண்முகம் , சிவ குணசேகரன் உள்ளிட்டோருக்கு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.
இதில் 11 பேர் இன்று (நவம்பர் 1) திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜராகினர்.
இந்த வழக்கை வரும் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்பிறகே உண்மை கண்டறியும் சோதனை எப்போது நடைபெறும் என்பது தெரியவரும்.
கலை.ரா
“காவல்துறையில் நேர்மையாக இருப்பது எளிதல்ல”– டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு!
தமிழகத்தின் வழியில் குஜராத்: மோர்பி செல்லும் மோடிக்கு கடும் எதிர்ப்பு!