வடகிழக்கு பருவமழை தீவிரம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Published On:

| By Selvam

rain meteorological department announcement

தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் (நவம்பர் 14, 15) பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. rain meteorological department announcement

தென் கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

ADVERTISEMENT

இது மேற்கு – வடமேற்கு திசையில்‌ நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நவம்பர் 15-ஆம் தேதி‌ நிலவக்கூடும்‌.

அதன்‌ பிறகு வடமேற்கு திசையில்‌ நகர்ந்து ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில் நவம்பர்‌ 16-ஆம்‌ தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று,

ADVERTISEMENT

வடக்கு – வடமேற்கு திசையில்‌ திரும்பி ஒரிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ நவம்பர் 17-ஆம்‌ தேதி‌ நிலவக்கூடும்‌. தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சி நிலவுகிறது.

இதன்‌ காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில் இன்றும் நாளையும்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

ADVERTISEMENT

ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, திருவாரூர்‌, தஞ்சாவூர்‌, கடலூர்‌, விழுப்புரம்‌ மாவட்டங்கள்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌,

காஞ்‌சிபுரம்‌, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்‌சி, பெரம்பலூர்‌, அரியலூர்‌, திருச்சி,‌ புதுக்கோட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டெல்டா மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ அதிக கனமழை பெய்யவும்‌ வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌.

நகரில்‌ பொதுவாக மிதமான மழை பெய்யக்கூடும்‌, அவ்வப்போது ஒரு சில இடங்களில்‌ பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்‌சியஸாகவும்‌ இருக்கக்கூடும்‌.

தமிழக கடலோர பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா, குமரிக்கடல்‌ மற்றும்‌ இலங்கை கடலோர பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. rain meteorological department announcement

இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஓய்வூதியம்: நீதிமன்றம் உத்தரவு!

கனமழையால் விடுமுறை அறிவிப்பு… கல்லூரி தேர்வுகள் நடைபெறுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share