அமைச்சர் எ.வ.வேலு தொடர்புள்ள பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை இன்று (நவம்பர் 3) காலை முதல் சோதனை நடத்தி வருகிறது.
கடந்த ஒரு வார காலமாகவே திமுக முக்கிய புள்ளிகளுக்கு தீபாவளி பரிசாக கடுமையான ரெய்டை மோடி தரப்போகிறார் என்கின்ற தகவல்கள் உயர்மட்டத்தில் சுற்றிக்கொண்டே இருந்தன.
திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகனை குறிவைத்து ரெய்டு நடத்தி திமுக இமேஜை குலைக்கலாம் என்ற திட்டத்தோடு அவர் தொடர்புடைய இடங்களை கண்காணித்து வந்துள்ளனர்.
அவரும் எந்த நேரமும் ரெய்டு வரலாம் என முதல்வர் எச்சரித்திருந்ததால் தயாராகவே இருந்து வருகிறார். திடீரென நேற்று திட்டத்தை மாற்றி அமைச்சர் வேலு இடங்களில் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
இதில் கூடுதலாக ஒரு முக்கிய தகவல் என்னவென்றால் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வீட்டில் ரெய்டு நடத்த முதலில் உத்தரவு வந்ததாகவும் பிறகு உத்தரவு வாபஸ் பெறப்பட்டதாகவும் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல் அறிந்து எடப்பாடியும் ரெய்டுக்கு தயாராகவே இருந்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…