புதுச்சேரி மாணவர்களுக்கு ‘ஸ்காலர்ஷிப்’ ஜாக்பாட்! ஜனவரி 31 கடைசி… தவறவிட்டால் பணம் கிடைக்காது!

Published On:

| By Santhosh Raj Saravanan

puducherry student scholarship application deadline january 2026 details

“பிள்ளைகளைப் படிக்க வைக்கணும், ஆனா கைல காசு இல்லையே…” என்று கவலைப்படும் பெற்றோர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி. புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகையைப் (Scholarship) பெறுவதற்கான காலக்கெடு முடிவடையப் போகிறது. “இன்னும் அப்ளை பண்ணாதவங்க, உடனே முந்துங்க!” என்று எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை.

மத்திய, மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் மூலம் ஏழை மாணவர்களுக்குப் பணம் போய்ச் சேர வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. ஆனால், சரியான நேரத்தில் விவரங்களைப் பதிவு செய்யாவிட்டால் அந்தப் பணம் வீணாகிவிடும்.

ADVERTISEMENT

எந்தெந்த திட்டங்கள்? முக்கியமாக இரண்டு திட்டங்களுக்கு இப்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:

  • பெருந்தலைவர் காமராஜர் நிதியுதவித் திட்டம் (PKFAS): புதுச்சேரியின் அடையாளமாக விளங்கும் இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்குக் கணிசமான உதவித்தொகை கிடைக்கிறது.
  • ப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் (Pre-Matric Scholarship): 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மத்திய அரசின் நிதியுதவித் திட்டங்கள்.

தலைமை ஆசிரியர்களுக்கு ‘செக்’: இது குறித்துப் புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், “தேசிய உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal – NSP), தகுதியான மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்தவர்களின் விவரங்களைச் சரிபார்த்து (Verification), புதுப்பிக்கும் (Renewal) பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும்” என்று ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடைசி தேதி என்ன? வரும் ஜனவரி 31, 2026 தான் கடைசி நாள். அதற்குள் பள்ளிகள் இந்தப் பணிகளை முடித்து, மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு ஆன்லைனில் ஃபார்வர்டு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமல் போனால், அதற்குப் பள்ளி நிர்வாகமே பொறுப்பேற்க நேரிடும்.

யாரெல்லாம் பயன்பெறலாம்? அரசுப் பள்ளிகளில் படிக்கும் எஸ்சி (SC), எஸ்டி (ST), ஓபிசி (OBC), சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் இந்தத் திட்டங்களில் பயன்பெற முடியும்.

ADVERTISEMENT

பெற்றோர்களே… இது ஸ்கூல் வேலைதானே, அவங்க பாத்துக்குவாங்கனு நீங்க அசால்ட்டா இருக்காதீங்க. சில நேரத்துல கூட்ட நெரிசல்ல உங்க பையன்/பொண்ணு பேரு விடுபட வாய்ப்பிருக்கு. உடனே ஸ்கூலுக்குப் போய், ‘எங்க பையனுக்கு ஸ்காலர்ஷிப் அப்ளை பண்ணியாச்சா? ஆதார் நம்பர், பேங்க் அக்கவுண்ட் எல்லாம் கரெக்டா இருக்கா?’னு ஒருவாட்டி ஹெச்.எம் (HM) கிட்ட கேட்டு கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க. சும்மா வர்ற பணத்தை ஏன் விடுவானேன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share