புதுச்சேரி பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள் என்ன?

Published On:

| By Selvam

புதுச்சேரி சட்டசபையில் 2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி இன்று (மார்ச் 13) தாக்கல் செய்தார்.

2011-ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி மாநிலத்தில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 9-ஆம் தேதி துவங்கியது. முதல் நாள் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றினார். அடுத்த நாள் ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.

இந்தநிலையில், இன்று காலை ரூ.11,600 கோடிக்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்

பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்:

புதுச்சேரியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும்.

அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 11-ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்சி வகுப்பு பாடத்திட்டம் கொண்டுவரப்படும்.

70 வயதிற்கு மேற்பட்ட மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகை ரூ.3000-யிலிருந்து ரூ.3500-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

விவசாயிகளுக்கு பால் கறவை இயந்திரம் இலவசமாக வழங்கப்படும். உயர் ரக கலப்பின பசு 50 சதவிகித மானியத்தில் வழங்கப்படும்.

புதுச்சேரியில் உலக தமிழ் மாநாடு நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கும் சமையல் எரிவாயு மானிய தொகை ரூ.300 வழங்கப்படும்.

செல்வம்

ஆஸ்கர் வென்ற தமிழக குறும்படம்: தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!

ஆஸ்கரை மிஸ் செய்த ஆல் தட் பிரித்ஸ் ஆவணப்படம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share