xசிறுமியின் கருக் கலைப்பு: நீதிமன்றம் அனுமதி!

public

15 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததால் உருவான கருவைக் கலைக்க உயர் நீதிமன்றக் கிளை அனுமதி வழங்கியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த15 வயது சிறுமி பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அரசுப் போக்குவரத்து ஊழியர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனால், பள்ளி செல்லும் அந்தச் சிறுமி கருத்தரித்தார்.

தனது மகள் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாவும், தனது மகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மகளின் கருவைக் கலைக்க அனுமதியளிக்குமாறும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அந்தச் சிறுமியின் தாயார் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், அந்தத் தாயின் கோரிக்கையை ஏற்றுக் கருவை கலைக்க உத்தரவிட்டார். சிறுமியின் விருப்பத்திற்கு மாறாக இந்த நிகழ்வு நடந்திருப்பதால் கருவைக் கலைக்கலாம். கருவைக் கலைத்த பிறகு சிறுமி குணமடையும் வரை, மருத்துவமனையில் அவருக்குத் தேவையான சிகிச்சையளிக்க வேண்டும்” எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *