Xகிச்சன் கீர்த்தனா: கேரட் துருவல்

Published On:

| By Balaji

�உடல் நல்ல முறையில் வளர, நாம் காய்கனிகளைக் கொண்டே உரம் போடலாம். ஒவ்வொரு காயிலும் ஒவ்வொரு சத்து உள்ளது. குறிப்பாக கேரட்டில் உள்ள சத்துகள் ஏராளம். தினமும் கேரட் சாப்பிட்டால் சருமம், கூந்தல், நகங்கள் ஆகியவை பொலிவு பெறும். பார்வைத்திறன் அதிகரிக்கும். துருவிய கேரட்டைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது அவர்களின் வயிற்றில் இருக்கும் பூச்சிகளை வெளியேற்றி சிறந்த பூச்சி நிவாரணியாக இது செயல்படும்.

**என்ன தேவை?**

துருவிய கேரட் – 1 கப்

உப்பு – சிறிதளவு

எலுமிச்சைச்சாறு – 1 டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்

மிளகுப்பொடி – அரை டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு – 1 டீஸ்பூன்

எண்ணெய் – 1 டீஸ்பூன்

பெருங்காயம் – 1 சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிதளவு

**எப்படிச் செய்வது?**

வாயகன்ற ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட்டைச் சேர்த்து உப்பு, எலுமிச்சைச்சாறு, மிளகுப்பொடி, கொத்தமல்லித்தழை சேர்த்துத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்துச் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும். இதை சாதத்துக்குத் தொட்டுச் சாப்பிடலாம். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைக்கலாம்.

[நேற்றைய ஸ்பெஷல்: பாலும் பதமும்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/03/01/3)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share