Xஇடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

Published On:

| By Balaji

தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக, ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ”வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

அதேபோல மதுரை விமான நிலையம், திருவள்ளூர் மாவட்டம், பூண்டியில் தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும்” என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share