இந்திய தலைநகர் டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். டெல்லியில் 950 மில்லியன் லிட்டர் நீர் குடிநீர் வாரியத்தால் வினியோகிக்கப்படுகிறது. அரியானாவில் இருந்து 610 மில்லியன் நீர் 2 கால்வாய்கள் மூலமும், யமுனா ஆற்றில் இருந்து 65 மில்லியன் லிட்டா் நீரும் டெல்லிக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
தற்பொழுது தலைநகர் டெல்லியில் சுமார் இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். டெல்லியில் வசிப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு 1200 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தண்ணீர் விநியோகம் பாதிக்கப்படும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லி குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “டெல்லியில் 674.5 அடி கொள்ளளவை கொண்ட வசிராபாத் குளத்தில் தற்போது 668.7 அடி வரை மட்டுமே நீா் உள்ளது. அரியானாவின் கேரியர் லைன் கால்வாய், டெல்லியின் துணை கால்வாய் மூலம் வரும் நீர் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. ஹைதர்பூர் அலகு 1 மற்றும் 2 , பவானா, நங்லோய், துவாரகா ஆகிய கால்வாய்களில் மிதக்கும் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் நீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தனர்.
மேலும், “வஜிராபாத், சந்திரவால், ஓக்லா ஆகிய குடிநீா் சுத்திகாிப்பு நிலையங்களில் பழுது ஏற்பட்டுள்ள நிலையில் அவை சரி செய்யப்படும் வரை குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும்.” என்று தெரிவித்தனர். அதுவரை டெல்லியின் வடக்கு, வடமேற்கு, மத்திய டெல்லி, மாநகராட்சி பகுதிகளில் குறைந்த அளவு தண்ணீர் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.