s
பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான ஷ்ரத்தா கபூர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
2010ஆம் ஆண்டு வெளியான டீன் பட்டி படத்தில் அறிமுகமாகியிருந்தாலும், 2013ஆம் ஆண்டு வெளியான ஆஷிக்-2 படம் அவருக்கு பேசும்படியாக அமைந்தது. கடந்த மாத இறுதியில் பாலிவுட்டில் வெளியாகி கவனம் பெற்றிருந்த `ஸ்ட்ரீ’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவாலின் பயோ-பிக்கில் நடித்து வருகிறார் ஷ்ரத்தா.
கடந்த மாதம் 27ஆம் தேதி இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு உண்டானது. இதன் காரணமாக அவரால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாமல் போனது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் ரத்த பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. ஷ்ரத்தா கபூர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருவதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளனர்.
இதுகுறித்து ஷ்ரத்தா, “தயவு செய்து கவலைப்படாதீர்கள். விரைவில் குணமாகி வருவேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று தனது இன்ஸ்டகிராமில் தெரிவித்துள்ளார்.
மேலும், “கடந்த சில மாதங்களாக ஓய்வின்றி உழைத்து வரும் ஷ்ரத்தா, தனது உடல் நலனுக்காகக் கொஞ்ச நாள் ஓய்வெடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது. விரைவில் அவர் குணமடைந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என நாங்கள் ஆவலாக உள்ளோம்” என்று சாய்னா படத்தின் தயாரிப்பாளர் பூஷன் குமார் மும்பை மிரருக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.�,