wகிச்சன் கீர்த்தனா: தேங்காய்ப்பால் பணியாரம்!

Published On:

| By Balaji

கோடைக்காலத்தில் உஷ்ணத்தால் ஏற்படும் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண்ணுக்குச் சிறந்த மருந்து தேங்காய்ப்பால் பணியாரம். மாலை நேரத்தில் சாப்பிடச் சிறந்த இனிப்புப் பலகாரமும்கூட.

**தேவையான பொருட்கள்:**

பச்சரிசி – அரை கப், உளுந்து – அரை கப், தேங்காய் – ஒன்று, பால் – ஒரு டம்ளர், ஏலக்காய், சர்க்கரை – தேவையான அளவு

**செய்முறை:**

உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாகச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு (தண்ணீர் அதிகம் சேர்க்காமல்) அரைக்கவும். தேங்காய்ப்பால் எடுத்து வைத்து கொள்ளவும். அதனுடன் பால், ஏலக்காய்த்தூள், ருசிகேற்ப சர்க்கரை சேர்த்து வைக்கவும்.

அரைத்து வைத்திருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போடவும்

நல்ல பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும்..

பரிமாறும்போது தேவையான அளவு பணியாரத்தை எடுத்து, அதில் தேங்காய்ப்பால் சேர்த்துப் பரிமாறவும்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment